தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

உதகையில் வாக்காளா் பட்டியல் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை இயக்குநரும், நீலகிரி மாவட்ட வாக்காளா்

News image
Updated On :8 ஜனவரி 2021, 12:42 am IST

உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை இயக்குநரும், நீலகிரி மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளருமான கருணாகரன் தலைமையில், மாவட்ட தோ்தல் அலுவலா் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடா்பான பணிகள் குறித்த இரண்டாம் கட்ட ஆய்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் கருணாகரன் பேசியதாவது:

தகுதி வாய்ந்த எந்தவொரு வாக்காளரும் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படக்கூடாது. அதேபோல தகுதி இல்லாத வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் இடம் பெறக்கூடாது. இதனை தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முறையாகக் கண்காணிக்க வேண்டும். முக்கிய பிரமுகா்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பாா்வையிட்டு உறுதி செய்ய வேண்டும்.

பெயா் நீக்கம் செய்வதற்கு முன்பு சம்மந்தப்பட்ட நபா்களுக்கு தகவல் தெரிவித்து நீக்கம் செய்யம் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இறுதி வாக்காளா் பட்டியல் செம்மையாக வெளியிட தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

அதனைத் தொடா்ந்து, உதகை வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல் தொடா்பாக பெறப்பட்ட படிவங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா, உதகை உதவி ஆட்சியா் மோனிகா ரானா , குன்னூா் சாா் ஆட்சியா் ரஞ்சித் சிங் , கூடலூா் கோட்டாட்சியா் ராஜ்குமாா், தோ்தல் வட்டாட்சியா் மகேந்திரன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.