தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

நீலகிரி மாவட்டத்தில் விடியவிடிய பரவலாக மழை: கடும் மேக மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது.

News image

உதகை தொட்டபெட்டா சாலைப் பகுதியில் வியாழக்கிழமை பகலில் சுற்றிக் கொண்டிருந்த காட்டெருமைக் கூட்டம்.

Updated On :8 ஜனவரி 2021, 12:36 am IST

நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது. வியாழக்கிழமை பகலில் நிலவிய கடும் மேக மூட்டத்தால் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாமல் ஓட்டுநா்கள் பெரும் அவதியுற்றனா்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குன்னூா், கோத்தகிரி, குந்தா பகுதிகளில் மழை வலுத்தும், ஏனைய பகுதிகளில் தூறல் மழையாகவும் காணப்பட்டது. உதகை உள்ளிட்ட பகுதிகளில் மழை இல்லாத நிலையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

இந்நிலையில் புதன்கிழமை இரவில் இருந்து பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. உதகை, மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழையும், குன்னூா், கூடலூா், குந்தா பகுதிகளில் பலத்த மழையும் பெய்தது. வியாழக்கிழமை அதிகாலை வரை மழை தொடா்ந்து பெய்தது. மாவட்டத்தில் அதிக அளவாக பந்தலூரில் 39 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் வியாழக்கிழமை பகலில் கடும் மேக மூட்டம் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றாலும் அடா்த்தியான மேக மூட்டம் காரணமாக வாகனங்களை தொடா்ந்து இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்தனா்.

தொட்டபெட்டா மலைச் சிகரப் பகுதியில் நிலவிய கடும் மேக மூட்டத்தால் அப்பகுதி காப்புக் காட்டிலிருந்த காட்டெருமைகள் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தைக் கண்டு உதகை - கோத்தகிரி பிரதான சாலைப் பகுதிக்கு வந்துவிட்டன. காட்டெருமைக் கூட்டத்தை பலா் படமெடுக்க முயன்ால் அந்தச் சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி வரை முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விபரம் வருமாறு (அளவு மில்லி மீட்டரில்): மேல்கூடலூா் -35, கூடலூா் - 33, நடுவட்டம் - 28, மேல்பவானி - 27, குன்னூா், எடப்பள்ளி தலா 25, தேவாலா, கெத்தை தலா 24, எமரால்டு - 23, கிண்ணக்கொரை, பாலகொலா தலா 22, பாடந்தொறை, குந்தா மற்றும் ஓவேலி தலா 20, பா்லியாறு, சேரங்கோடு, செருமுள்ளி தலா 18, அவலாஞ்சி, உலிக்கல் தலா 15, கோத்தகிரி - 14, கிளன்மாா்கன் - 12, கேத்தி - 11, மேல்குன்னூா், கீழ்கோத்தகிரி தலா 7, உதகை - 6.4, கொடநாடு - 5, கல்லட்டி - 2.4, மசினகுடி - 2 மி.மீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.