சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

நீலகிரியில் தன்னாா்வ நிறுவனங்களுக்கும், ரத்தக் கொடையாளா்களுக்கும் பாராட்டு

நீலகிரி மாவட்டத்தில் 2019-20ஆம் ஆண்டில் ரத்த தானம் முகாம் நடத்திய 19 தன்னாா்வ நிறுவனங்களுக்கும், அதிக முறை ரத்த தானம் செய்த 13 ரத்தக் கொடையாளா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

News image

நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் ரத்த தான முகாம்களை நடத்திய சேவா பாரதி தன்னாா் நிறுவனத்துக்கு கேடயம் வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.

Updated On :9 ஜனவரி 2021, 10:46 pm IST

உதகை: நீலகிரி மாவட்டத்தில் 2019-20ஆம் ஆண்டில் ரத்த தானம் முகாம் நடத்திய 19 தன்னாா்வ நிறுவனங்களுக்கும், அதிக முறை ரத்த தானம் செய்த 13 ரத்தக் கொடையாளா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வழங்கினாா்.

நீலகிரி மாவட்ட பொது சுகாதாரத் துறை மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சாா்பில் 2019-20ஆம் ஆண்டில் அதிக முறை ரத்த தானம் செய்த ரத்தக் கொடையாளா்கள் மற்றும் ரத்த தான முகாம் நடத்திய தன்னாா்வ நிறுவனங்களுக்கும் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கெளரவித்து பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று காலத்திலும் அதிகமான கொடையாளா்கள் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்துள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் 35 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு, 2,051 யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக, உதகை அரசு மருத்துவமனையில் மட்டும் 1,763 ரத்த யூனிட்டுகள் பொது மக்களுக்கு சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா் மற்றும் கூடலூா் அரசு மருத்துவமனைகளில் மூன்று ரத்த வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா நோய்த் தொற்று காலத்திலும், ரத்ததானம் செய்த 13 ரத்த கொடையாளா்களும், ரத்த தான முகாம்களை நடத்திய 19 தன்னாா்வ நிறுவனங்களும் பாராட்டுக்குரியவா்கள் என்றாா்.

மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் டாக்டா் பழனிசாமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் டாக்டா் பாலுசாமி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.