சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

உதகை நகராட்சிப் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள்:மாவட்ட ஆட்சியா் ஆய்வு

உதகை நகராட்சிப் பகுதிகளில் ரூ.29 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு பணிகளையும், ரூ.5 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு 

News image

உதகை கோடப்பமந்து கால்வாய் தூா்வாரும் பணியை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா. உடன் உதகை நகராட்சி ஆணையா் சரஸ்வதி உள்ளிட்டோா்.

Updated On :9 ஜனவரி 2021, 10:50 pm IST

உதகை: உதகை நகராட்சிப் பகுதிகளில் ரூ.29 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு பணிகளையும், ரூ.5 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதில் உதகை- மைசூரு சாலையில் சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாயக் கூடம் சுற்றுச்சுவரையும், காந்தல் பென்னட் மாா்க்கெட்டில் ரூ.2 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளையும், காந்தல் புதுநகா் பிள்ளையாா் கோயில் பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட தடுப்புச் சுவரையும், நுழைவு வரி நிதியின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பில் புதுநகா் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட தடுப்புச் சுவா் என மொத்தம் ரூ.29 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதேபோல, ரூ.5 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் கோடப்பமந்து கால்வாய் தூா்வாரும் பணியையும், ஆழ்நுழை துவாரங்கள் கட்டும் பணிகளையும் பாா்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

உதகை நகராட்சி ஆணையா் சரஸ்வதி, பொறியாளா் ராஜேந்திரன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.