தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மகாகவி பாரதியின் இஸ்லாத்தின் மஹிமை

மகாகவி பாரதியின் இஸ்லாத்தின் மஹிமை - செ.திவான்; பக்.125; ரூ.100; சுகைனா பதிப்பகம், பாளையங்கோட்டை; )0462-2572665. மகாகவி பாரதியின் எழுத்துக்கு நூறு வயதாகிவிட்டது என்றால் வியப்பாகத்தான் இருக்கிறது. அவரு

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:53 pm

செ.திவான்

மகாகவி பாரதியின் இஸ்லாத்தின் மஹிமை - செ.திவான்; பக்.125; ரூ.100; சுகைனா பதிப்பகம், பாளையங்கோட்டை; )0462-2572665.

மகாகவி பாரதியின் எழுத்துக்கு நூறு வயதாகிவிட்டது என்றால் வியப்பாகத்தான் இருக்கிறது. அவருடைய உரைநடை அத்தனை சமகாலத்துவம் உடையதாக உள்ளது. அதேபோல விஷயங்களை அணுகும் முறையில் காணப்படும் அவருடைய மன விசாலம் இன்றும் பின்பற்றத் தக்கது.

தொழில்நுட்ப சாதனங்கள் எதுவும் இல்லாத அந்தக் காலத்தில் கையில் கிடைத்த ஒரு சில ஆங்கிலத் தினசரிகளைக் கொண்டு உலகில் நடந்த அன்றாட விஷயங்களைத் தெரிந்து கொண்டு பொது அறிவை வளர்த்துக் கொண்டவர் அவர். சிறந்த பத்திரிகையாளராகத் திகழ்ந்த பாரதி தன் எழுத்தில் தொடாத விஷயமே இல்லை என்று துணிந்து கூறலாம்.

அவருடைய காலகட்டத்தில் நடைபெற்ற அனைத்து உலக விஷயங்களைக் குறித்தும் சுருக்கமான நேரத்தில் ஒரு தீர்மானமான முடிவுக்கு வரும் அளவுக்கு அவருக்கு தீர்க்கமான சிந்தனை இருந்தது.

அவர் எழுதிய எழுத்துகளில் இஸ்லாம் பற்றி உள்ளவற்றையெல்லாம் தொகுத்து ஒரு தனிப் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார் செ.திவான். பாரதி அன்பரான திவான் பதிப்பித்துள்ள நான்காவது பாரதி குறித்த புத்தகம் இது. இஸ்லாம் பற்றி தன்னுடைய கவிதைகளிலும் உரைநடையிலும் பாரதி எழுதியுள்ளவை எல்லாம் ஒரே புத்தகமாகக் கிடைப்பது ஒரு புதிய முயற்சிதான். ஆராய்ச்சி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், சாதாரண வாசகருக்கும் மகாகவியின் மனதை அறிய உதவும் அருமையான புத்தகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.