கல்வெட்டுக்கலை - பொ. ராசேந்திரன், சொ. சாந்தலிங்கம்; பக்.240; ரூ. 250; பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம், மதுரை.
இனம், மொழி, பண்பாட்டின் ஆணிவேர்களை அலசி ஆராய உதவுபவை இலக்கியங்களும் கல்வெட்டுகளும். நாட்டின் வரலாற்றை எழுதுவதிலும் அவை முக்கியப் பங்காற்றுகின்றன. அவற்றில் கல்வெட்டுகள், கால ஓட்டத்தில் தேய்ந்து போனாலும் உள்ளதை உள்ளபடி சொல்பவை.
இலக்கிய வளர்ச்சியை அறிந்து கொள்ள கல்வெட்டுகள் உதவுவதால், "கல்வெட்டு கற்பது' ஒரு கலையாகவே போற்றப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் வளர்ந்துவரும் துறையாக "கல்வெட்டியல்' மாறியுள்ளது. அதைக் கற்போரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
அந்த வகையில், "கல்வெட்டுக்கலை' குறித்து எல்லோருமே அறிந்துகொள்ள ஏதுவாக மிக எளிமையுடன் எழுதப்பட்டுள்ளது இந்நூல். தமிழ் எழுத்துகள், கருத்தெழுத்து, ஒலிஎழுத்து, குறியீடு போன்றவற்றை விளக்கி, கல்வெட்டுகளின் பொதுஅமைப்பு, கல்வெட்டுகளில் காலக் கணக்கீடு, கல்வெட்டுகளைப் படியெடுக்கும் முறை, அவற்றை நூலாக்கும் பணி போன்றவற்றையும் "கல்லில் எழுத்துபோல' படிப்போர் மனதில் ஆழமாகப் பதியும் வண்ணம் எடுத்துரைக்கின்றனர் நூலாசிரியர்கள்.
மேலும், மாங்குளம், புகளூர், அறச்சலூர், வைகைக்கரை, மானூர் எனப் பல்வேறு கல்வெட்டுகள் குறித்து விரிவாகவும், வியக்கத்தக்க செய்திகளையும் சொல்லுகின்றன இந் நூலில் உள்ள கட்டுரைகள்.
ஓலைச்சுவடிகள் தொடர்பாகவும் கட்டுரை ஒன்று உள்ளது. மன்னர்களின் மரபுவழிப் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது, ஆராய்ச்சி மாணவர்களுக்கும், வரலாற்று ஆர்வலர்களுக்கும் பயனுள்ள நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொந்தரவு கொடுத்த இளைஞரின் மண்டையை உடைத்த கயாடு லோஹர்!

திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?

நன்கொடை கையாடல் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: மாயாவதி எச்சரிக்கை!

'பிரதமர் மோடி தூங்கமாட்டார்'! காலை 6 மணிக்கு செல்போன் அழைப்பு விடுத்த டிரம்ப்!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


