ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை - நாகேஸ்வரி அண்ணாமலை: பக். 332; ரூ.270; அடையாளம் வெளியீடு, புத்தா நத்தம்; )04332- 273444.
5 தலைமுறைகளைச் சேர்ந்த 25 பெண்களின் வாழ்க்கைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல்.பெண்களைப் பற்றியும் குறிப்பாக அவர்களின் திருமண வாழ்க்கையின் நிலையைப் பற்றியும் பேசுகிறது.
சிவகாசியைப் பூர்வீகமாகக் கொண்ட நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், கல்வி கற்பதில் அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், ஜாதிய நடைமுறைகள், எதிர்காலத்தை, குறிப்பாக திருமணத்தைத் தீர்மானிப்பதில் இளம் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த சுதந்திரம் என்ன என்பது போன்ற முக்கிய பிரச்னைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், அன்றைய சமூக நடைமுறைகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது நடத்தப்படும் சடங்குகள், கூட்டுக் குடும்ப முறை, மாமியார் - மருமகள், கணவன் - மனைவி உள்ளிட்ட குடும்ப உறவுகளுக்கு இடையே நடைபெற்ற சிக்கல்கள் குறித்தும் இதில் அலசப்படுகிறது.
பெண் சுதந்திரம் குறித்து இன்று பேசப்பட்டு வந்தாலும் கணவன், மனைவி உறவில் உள்ள சில அடிப்படை விஷயங்கள் இன்றளவிலும் மாறவில்லை என்றும், பெண்களே அதை மாற்றுவதற்கு முயற்சிக்கவில்லை என்றும் அதற்குக் காரணங்களாக உள்ள கசப்பான உண்மைகளையும் துணிச்சலாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். சிறந்த நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் மயக்கம்: தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

கட்டா குஸ்தி - 2 மேக்கிங் விடியோ!

தனியார் பள்ளியில் பயங்கர தீவிபத்து! | Bengaluru

அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



