ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை

ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை - நாகேஸ்வரி அண்ணாமலை: பக். 332; ரூ.270; அடையாளம் வெளியீடு, புத்தா நத்தம்; )04332- 273444.

News image
Updated On :14 நவம்பர் 2016, 12:32 am IST

ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை - நாகேஸ்வரி அண்ணாமலை: பக். 332; ரூ.270; அடையாளம் வெளியீடு, புத்தா நத்தம்; )04332- 273444.
5 தலைமுறைகளைச் சேர்ந்த 25 பெண்களின் வாழ்க்கைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல்.பெண்களைப் பற்றியும் குறிப்பாக அவர்களின் திருமண வாழ்க்கையின் நிலையைப் பற்றியும் பேசுகிறது.
சிவகாசியைப் பூர்வீகமாகக் கொண்ட நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், கல்வி கற்பதில் அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், ஜாதிய நடைமுறைகள், எதிர்காலத்தை, குறிப்பாக திருமணத்தைத் தீர்மானிப்பதில் இளம் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த சுதந்திரம் என்ன என்பது போன்ற முக்கிய பிரச்னைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், அன்றைய சமூக நடைமுறைகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது நடத்தப்படும் சடங்குகள், கூட்டுக் குடும்ப முறை, மாமியார் - மருமகள், கணவன் - மனைவி உள்ளிட்ட குடும்ப உறவுகளுக்கு இடையே நடைபெற்ற சிக்கல்கள் குறித்தும் இதில் அலசப்படுகிறது.
பெண் சுதந்திரம் குறித்து இன்று பேசப்பட்டு வந்தாலும் கணவன், மனைவி உறவில் உள்ள சில அடிப்படை விஷயங்கள் இன்றளவிலும் மாறவில்லை என்றும், பெண்களே அதை மாற்றுவதற்கு முயற்சிக்கவில்லை என்றும் அதற்குக் காரணங்களாக உள்ள கசப்பான உண்மைகளையும் துணிச்சலாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். சிறந்த நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.