வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

ரூபாய் நோட்டுக்கள் தடை

ரூபாய் நோட்டுக்கள் தடை - எஸ். குருமூர்த்தி; பக். 160; ரூ. 120; அல்லயன்ஸ் வெளியீடு, சென்னை 4; 044- 2464 1314 . 

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 12:52 am IST

ரூபாய் நோட்டுக்கள் தடை - எஸ். குருமூர்த்தி; பக். 160; ரூ. 120; அல்லயன்ஸ் வெளியீடு, சென்னை 4; 044- 2464 1314 . 
இந்த நூலின் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி நாடறிந்த பொருளாதார நிபுணரும் அரசியல் விமர்சகருமாவார். நாட்டின் முக்கிய பொருளாதார விவகாரங்களைப் பற்றி எழுதி வருகிறார். நாட்டையே உலுக்கிய உயர் மதிப்பு கரன்சி மதிப்பிழப்பு குறித்து எஸ். குருமூர்த்தி எழுதிய முக்கிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். மேலும் ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பைத் தொடர்ந்து ஆங்கிலத் தொலைக்காட்சிகளுக்கு அவர் அளித்த பேட்டிகளின் தமிழாக்கமும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. 
கடந்த 2016-ஆம் ஆண்டு நவ.8-ஆம் தேதி நாட்டில் புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு கரன்சிகளின் எண்ணிக்கை மொத்த கரன்சி புழக்கத்தில் 86 சதவீதம் என்ற நிலையில், அவை மதிப்பிழந்துவிட்டதாக அரசு அறிவித்தபோது எழுந்த பூமிக்குலுக்கத்தை எளிதில் புரிந்துகொள்ளலாம். அந்த நடவடிக்கை மூலம், எவ்வாறு கருப்புப் பணப் புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டது, தீவிரவாத , பயங்கரவாத நடவடிக்கைகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டன என்பதை விளக்குகிறார்.
மேலும், கரன்சி மதிப்பிழப்பால் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றங்களும் விளக்கப்பட்டுள்ளன. கரன்சி மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எழுந்த அரசியல் எதிர்ப்பானது, நாட்டின் முக்கிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி அடைந்த பிறகு அடங்கிவிட்டதும் சுட்டிக் காட்டப்படுகிறது. 
பொருளாதார விவகாரங்கள் என்றாலும் அனைவரையும் பாதிக்கக் கூடிய இந்த முக்கிய விவகாரம் குறித்து, அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.