திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

DIN

ஞங்கள் அம்மையுடே பர்த்தாக்கள் (எங்கள் அம்மாவின் கணவர்கள்) - ஜ்வாலா முஹி ராஜ்; பக்.462; ரூ.400; யூஎம்ஐ புக் பேங்க், சென்னை -109;  9043050699.

ஆதியிலிருந்து தாய் வழிச் சமூகமாகவே மனித நாகரிகம் இருந்தது. வம்ச விருத்திக்காக வந்து சேரும் ஆண், வம்ச விருத்திக்குக் காரணமானவன் என்பதால் "காரணவன்' எனப்பட்டான். பெற்றெடுக்கும் முதல் பெண் குழந்தைக்கு, தாய்க்குப் பிறகு வாரிசு உரிமை வந்து சேரும். இளம்பெண்ணாக இருக்கும்போதே காரணவன் இறந்துவிட்டாலோ அல்லது பிரிந்து சென்றாலோ அடுத்ததாக ஒருவனை அவள் மறுமணம் செய்துகொள்ள முடியும்.  அந்தப் பெண் தனியாகவும் வாழலாம். இந்த முறைக்கு "மருமக்கள் தாயம் வாரிசு வழிமுறை' என்று பெயர்.

ஆணாதிக்க மனோபாவம் காரணமாக, பிற்காலத்தில் அவள் மறுமணம் செய்தால்தான் சொத்துகளை அனுபவிக்க முடியும் என்ற முறையைப் புகுத்தினர். இதனால் பெண்ணின் அழகையும் சொத்துகளையும் முடிந்தவரை அனுபவிக்கலாம் என்ற சூழ்ச்சியுடன் அவர்களது வாழ்க்கையைச் சீரழித்த காரணவன்கள் ஏராளம்.

இதுபோன்ற ஒரு சூழ்ச்சியில் சிக்கிய சரோஜினி என்ற ஜமீன்தாரிணி, 5 கணவர்களை ஒருவர் பின் ஒருவராக சந்தர்ப்பச் சூழலால் திருமணம் செய்கிறாள். பிறகு ஜோடிக்கப்பட்ட விபத்தில் அவள் கொலை செய்யப்படுகிறாள்.  இதன்பிறகு, அவளின் குழந்தைகள் துன்பப்பட்டதை இந்த நாவல் விவரிக்கிறது. சரோஜினியின் இரண்டாவது கணவர் பொன்னன் ஆசாரி அந்தமான் சிறையில் இருந்து திரும்பி வருவது திருப்பத்தை ஏற்படுத்துகிறது. பொன்னன் ஆசாரியும் அவருடைய மகள் விலாஸினியும் மையக் கதாபாத்திரமாக விளங்குகின்றனர். கணவனை இழந்த பெண்களும் மறுமணம் செய்யலாம் என்பது நூல் வலியுறுத்தும் செய்தி. நூலில் எழுத்துப் பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.