சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

லா.ச.ரா.: தேர்ந்தெடுத்த கதைகள் - தொகுப்பாசிரியர் ஹவி; பக்.158; ரூ.222;  வானவில் புத்தகாலயம், சென்னை 17; ✆ 7200050073.

லா.ச.ரா. என்கிற  லா.ச.ராமாமிருதத்தின் 7 சிறுகதைகளின் தொகுப்பு.  மனதின் உள்ளில் நிகழும்  எண்ண ஓட்டங்களை எழுத்தில் வடிக்கும் 'நனவோடை' உத்தியை தமிழில் முதலில் கையாண்டு பல இலக்கியப் படைப்புகளை அளித்துள்ளவர்.

தனது கதை உலக மாந்தர்களின் அந்தரங்கச் சிக்கல்கள், போராட்டங்கள், குழப்பமான எண்ண ஓட்டங்களை வெற்றிகரமாக எழுத்தில் வடித்தவர்.  20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பெரும்பாலான தமிழ்க் குடும்பங்களில் இருந்த நிலைமை, எதிர்கொண்ட  மனப் போராட்டங்கள் கதைக்களமாக உள்ளன.

இதற்கு உதாரணமாக 'பாற்கடல்' என்ற சிறுகதை.  தலைதீபாவளியைக் கொண்டாட முடியாமல் தவிக்கும் மனைவி, வேலைநிமித்தம் வெளியூரில் சிக்கிய கணவனுக்கு எழுதும் கடிதம்தான்  'பாற்கடல்'. 'உங்களுடன் கடிதத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன். இல்லை. கடிதத்தில் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்'  என்று ஏங்குகிறாள் அந்த மனைவி.

உரைநடை கதையா அல்லது கவிதை வரிகளா என்று வாசகரை சில சமயம் திக்குமுக்காடச் செய்யும் நடைக்கு சொந்தக்காரர் லா.ச.ரா.

'உன்னை நான் அறியுமுன்னர் என் உள் ப்ரக்ஞையில் நீ பீடம் கொண்டுவிட்டாய்.' 'துயிலில் தாண்டவ கோலத்தில் மூழ்கிவிட்ட செஞ்சடாதரன்.' 'அடித்த பஞ்சாகி பிறகு அதனுள் ஒளித்த வஞ்சகக் கோடரியின் கூர்முனையுமாகி, உவமைகள், உருவகங்கள், உருபுகள், கருக்கள் கருவின் இருளில் மறைந்து தோன்றி மீண்டும் மறையும் த்வனிகள்.'

'நேற்று, இன்று, இனி என நாம் நியமித்த ஏற்பாட்டில் நாம் உழம்பிக் கொண்டிருப்பது என்றும் உள்ள இன்றுதான்'. 

இலக்கிய வாசகர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய தொகுப்பு நூல் இது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.