ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

DIN

யுகத்தின் முடிவில் - மராத்தி மூலம்; ஐராவதி கார்வே (தமிழில்- இராசு.விவேகானந்த கோபால்); பக்.271; ரூ.150; சாகித்ய அகாதெமி, சென்னை- 18.

ஐராவதி கார்வே என்கிற மானுடவியல் பேராசிரியர் மகாபாரதத்தின் ஈர்ப்பு காரணமாக,  அதனைப் பற்றி  விரிவாக ஆராய்ந்ததாகவும், 'ஜய' என்று சொல்லப்பட்டு, பின்னர் 'மகாபாரதம்' எனப் பெயர் பெற்ற வரலாறுகள் குறித்தும், நூலின் அறிமுக உரையில் விரிவாக எழுதியிருக்கிறார்.

மகாபாரதப் பாத்திரங்கள் குறித்து 1964-இல் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியபோது, பண்டார்கர் ஆய்வு நிறுவனம்  பதிப்பித்த மகாபாரதத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆராய்ச்சிப் பதிப்பு- சுவடிகளை ஆராய்ந்து பல கிளைக் கதைகளை நீக்கிப் பதிப்பிக்கப்பட்ட பதிப்பு ஆகும்.

மகாபாரதக் கதாபாத்திரங்களான காந்தாரி, குந்தி, திரௌபதி உள்ளிட்டோரின் (கதை நடக்கும் காலத்திய) மனோநிலை, அரச குடும்ப நடைமுறைகள் குறித்து விரிவாக ஆராய்ந்து சில கேள்விகளையும் எழுப்புகிறார்.

பாண்டு மரணமடைந்து, அவரது உடல் எரியூட்டப்படும் போது அரசியான குந்தி உடன்கட்டை ஏறாமல் மாத்ரி ஏறியது குறித்தும் நூலாசிரியர் விவாதிக்கிறார்.

அதேபோன்று கிருஷ்ணர்- அர்ஜுனர் இருவரது தோழமையும்- அவர்களது வாழ்க்கையும் காண்டவபிரஸ்தத்தை இருவரும் சேர்ந்து தீக்கிரையாக்கியது என்று அனைத்தையும் விவரிக்கும் நூலாசிரியர் கிருஷ்ணர் தெய்வமாக்கப்பட்டது குறித்தும் தனது கருத்தைக் கூறி விவாதத்துக்குள்ளாக்கி இருக்கிறார்.

பக்தி இயக்கம் முன்னணிக்கு வந்தபோது, இதிகாசப் பாத்திரங்கள் தெய்வங்களாக்கப்பட்டன என்பது அவரது கூற்று. மகாபாரத ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்ற நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.