சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

DIN

அயோத்தி, 500 வருட போராட்ட வரலாறு - சக்திவேல் ராஜ்குமார்; பக்.158; ரூ.150; அல்லயன்ஸ் கம்பெனி, மயிலாப்பூர், சென்னை - 600 004. ✆ 044-24641314.

உலகிலேயே நீண்ட நாள் நடந்த அயோத்தி வழக்கு குறித்தும், ராம ஜென்ம பூமிவழக்கின் 300 வருட பின்னணி குறித்தும் இந்நூல் விரிவாக அலசுகிறது.

ராமர் ஆலயத்தை மையப்படுத்திய அபூர்வ சம்பவங்கள், போராட்டங்கள், அரசியல் நிகழ்வுகள், அயோத்தி வழக்கின் தீர்ப்பு, சட்ட விளக்கங்கள் உள்ளிட்டவற்றை மிகவும் எளிமைப்படுத்தி அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் கால வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது இந்நூலின் சிறப்பு.

ராம ஜென்ம பூமியில் பிரம்மாண்டமான கோயிலை கட்டியவர் விக்கிரமாதித்த மகாராஜா. அவரது காலத்துக்குப் பிறகு பல்வேறு அரசர்களால் செம்மைப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, மொகலாயர் ஆட்சியில் அந்தக் கோயில் எவ்வாறு படிப்படியாக மசூதியாக மாற்றப்பட்டது என்பதை பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து இந்நூல் தெளிவுபடுத்துகிறது.

1528-ஆம் ஆண்டிலிருந்து தற்போது அயோத்தில் கட்டப்பட்டுவரும் ராமர் கோயில் வரையிலான நிகழ்வுகள், ராம ஜென்ம பூமியை மீட்க உறுதுணையாக நின்ற இந்து சமய பெரியோர்கள், எதிர்தரப்பினர் ஆகியோர் குறித்து இந்நூல் தெரிவிக்கும் கருத்துகள் நடுநிலையாக உள்ளன.

மொகலாயர்கள், ஆங்கிலேயர்கள், போலி மதச்சார்பின்மை, ஆட்சியாளர்களின் அலட்சியம் ஆகியவற்றால் இந்து மதமும், கோயில்களும் எவ்வாறெல்லாம் சிதைக்கப்பட்டன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 14 நதிகள் தற்போதும் அதே பெயரில், அதே இடத்தில் உள்ளன என்பதை வைத்து ராமாயணம் நிஜமாகவே நிகழ்ந்த சரித்திரம் என்ற கோணம் வியப்பளிக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.