சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005-ம் பொதுத் தகவல் அலுவலரின் கடமைகளும்

News image
Updated On :27 பிப்ரவரி 2023, 10:01 am

DIN

தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005-ம் பொதுத் தகவல் அலுவலரின் கடமைகளும் -வடகரை செல்வராஜ்;  பக்.648; ரூ.550; ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை-24; ✆044-29999611.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-இல் மத்திய அரசு கொண்டு வந்தது.  

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சிறப்பான திட்டம்.  அரசுத் திட்டங்கள், மக்கள் நலப் பணிகளில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்தில், ஆயிரக்கணக்கான ஊழல்கள், முறைகேடுகள்,  அதிகார துஷ்பிரயோகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சாதாரண குடிமகன் கூட குடியரசுத் தலைவர் அலுவலகம் உள்பட கேள்விகளை எழுப்பி தகவல்களைப் பெற முடியும். அதுவும் தபால் செலவும், பத்து ரூபாய் கட்டணத்தில்தான்.

தமிழ்நாட்டில் உள்ள அரசுத் துறை அலுவலகங்களில் தகவல்களைப் பெறுவது எப்படி, விண்ணப்பிப்பது எப்படி,  சந்தேகங்கள், தகவல்களைத் தர மறுத்தால்  மேல்முறையீடு செய்வது எப்படி என்பவற்றுடன் முக்கிய தீர்ப்புரைகள், ஆன்லைனில் விண்ணப்பிப்பது,  கட்டண விலக்கு பெறுதல் என்பது உள்பட சட்டம் குறித்து முழுமையான கையேடாக இந்த நூல் விளங்குகிறது.  ஒவ்வொரு அரசு அலுவலகங்களுக்கும் தகவல் பெற விண்ணப்பிக்க இருக்கும் பொது தகவல் அலுவலர்களின் முகவரிகளிலும் இந்த நூலில் இருப்பது சிறப்பு.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் உருவான வரலாறு என்ற கட்டுரையில், சட்டம் உருவாக காரணமாக இருந்த சம்பவங்கள், நிகழ்வுகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. 

பொதுமக்கள் நலப் பணிகளில் ஈடுபடுவோரும், ஊழல்- முறைகேடுகள் நடைபெறுவதைத் தட்டிக் கேட்கத் துணிவோரும் அவசியம் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.