சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

விதியே... விதியே... தமிழச் சாதியை...

News image
Updated On :27 பிப்ரவரி 2023, 10:03 am

DIN

விதியே... விதியே... தமிழச் சாதியை... - பெ.சிதம்பரநாதன்;  பக்.200, ரூ.170; அன்னம் வெளியீடு,  தஞ்சாவூர்- 613007; ✆9443159371.

தினமணியின் நடுப்பக்கத்தில் வெளியான 26 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சமூகம், அரசியல், சூழலியல் சார்ந்த இக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் மானுடத்தின் மனசாட்சியுடன் நிகழ்த்திய உரையாடல்கள்.

சமுதாயத்தின் விவாதப் பொருளாக இருக்கும் பல விஷயங்களை முன்னெடுத்து அதனூடே அறம் சார்ந்த கருத்துகளை எந்த சமரசமும் இன்றி பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். குறிப்பாக, மொழிக் கொள்கை குறித்த கட்டுரையில் தமிழ் வளர மும்மொழி கொள்கை அவசியம் என்பதை ஏற்புடைய வாதங்களால் வலு சேர்த்திருக்கிறார்.

அதேபோன்று குடியுரிமைச் சட்டம், நீட் தேர்வு, வாக்கு வங்கி அரசியல், சட்டப் பேரவை, நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள், பொதுவாழ்க்கையில் ஈடுபடுவோருக்கான வயது வரம்பு என பல முக்கிய விவகாரங்களில் சமூகத்துக்கான குரலை எழுத்தின் வழியே எழுப்பியிருக்கிறார் பெ.சிதம்பரநாதன்.

மதச்சார்பின்மை விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுவது அநாகரிகமான செயல் எனக் குறிப்பிடும் நூலாசிரியர், தேச நலன் பேசும் கட்சிகளின் சுய நலத்தை வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறார். இடஒதுக்கீடு என்ற பெயரில் நிகழும் சாதியப் பாகுபாட்டை விளக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரை மீள்வாசிப்புக்குரிய ஒன்று.

ஜனநாயகத்தின் மறையாத வடுக்களையும், அதனூடே நிகழ்த்தப்படும் சமூக, அரசியல் வன்மங்களையும் சமகாலத் தலைமுறைக்கு கடத்தும் முயற்சி இந்நூல். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.