சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

1908 முன்னும் பின்னும் - எஸ்.காசி விஸ்வநாதன்; பக். 180; ரூ.150;  நக்கீரன், சென்னை-14; ✆ 044- 4399 3000.

ஆங்கிலேயருக்கு எதிராக நாட்டில் முதல் வெகுஜன எழுச்சியை ஆக்ரோஷமாக எழுப்பிய 'திருநெல்வேலி எழுச்சி' நிகழ்வுதான் நூலின் பிரதானம்.

1908-ஆம் ஆண்டு மார்ச் 8-இல் விபின் சந்திர பாலர் விடுதலையான நாளை சுயராஜிய நாளாகக் கொண்டாட திருநெல்வேலி மாவட்ட மக்கள் முடிவு செய்தது, வ.உ.சி., சுப்பிரமணிய சிவா கைது, அதன் பின்விளைவுகள் ஆகியவை நாடெங்கும் பேசப்பட்டது. 'திருநெல்வேலி எழுச்சி' என வரலாற்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வு குறித்து பலரும் அறியாத அரிய தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.

காங்கிரஸின் தோற்றம், போராட்டத் தன்மைகள், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோரின் போராட்டங்கள், தியாகங்கள் போன்றவற்றை நூலாசிரியர் ஆராய்ந்து பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தியுள்ள விதம் சிறப்பானது.

'திருவனந்தபுரம் எழுச்சி', 'திலகர் வழக்கு', 'அரவிந்தர் வழக்கு', 'ஆஷ் கொலை' போன்றவை குறித்த அரிய தகவல்களும் நூலில் இடம்பெற்றுள்ளன.

'தமிழ்நாட்டின் பாஞ்சாலங்குறிச்சி' எனும் கட்டுரையில், 1857-இல் இந்திய முதல் சுதந்திரப் போராட்டத்துக்கு முன்னரே 1806-இல் வேலூர் சிப்பாய்ப் புரட்சியும், பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன், சிவகங்கை மருது சகோதரர்கள் உள்பட பல சரித்திர நாயகர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரப் போர் புரிந்து வீழ்ந்துபட்டதும் விவரிக்கப்பட்டுள்ளது. பாரதியின் குரு நிவேதிதா தேவி, புரட்சியாளர் சுவாமி விவேகானந்தர், அரவிந்தர், பாலகங்காதரதிலகர், லாலா லஜபதி ராய்,  விபின் சந்திர பால் போன்றோரின் சுதந்திரப் போராட்டப் பங்களிப்பு குறித்த அரிய தகவல்கள் நிறைந்துள்ளன. பொக்கிஷமான நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.