சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

செல்லி மற்றும் பிற கதைகள் - ஆசு; பக். 488;  ரூ. 500;  தமிழ்வெளி, சென்னை- 122; ✆ 90940 05600.

உடல் உழைப்பை மேற்கொள்வோர் எழுத்தாளர்களாகவும் இருப்பது தமிழில் மிகவும் குறைவே. கடைஞரான ஆ. சுப்பிரமணியன் என்ற ஆசுவின் நான்கு தொகுப்புகளிலுள்ள 46  சிறுகதைகளின் தொகுப்பு நூல் இது.

ஒவ்வொருவரைச் சுற்றியும் ஒவ்வொரு நாளும் எத்தனையோ நிகழ்வுகள் மனதில் தைப்பதாகக் கடந்து செல்கின்றன. அவற்றையே எழுதுகிற  ஒருவர் சந்திக்கும்போது, கவிதையாகவோ, சிறுகதையாகவோ திரண்டு  இலக்கியமாகி விடுகின்றன.  

மிகச் சிறந்த கதைகளில் ஒன்றான 'ஒரு பூவரசு மரக் கட்டிலி'ல் கலைவாணியின் வாழ்வைச் சொல்லிச் செல்கிறது, ஒரு குறியீடாக வரும் கட்டில். அம்மாக்கள் வாழ்ந்த தெருவைப் படித்து முடிக்கும்போது, வீரம்மாள் உள்பட அனைவரையும் இன்னமும் விரிவாகப் பதிவு செய்திருக்கலாமே  என்ற ஏக்கம் தோன்றுகிறது. கிராமங்களில் ஒன்றுமில்லாத ஒன்று எவ்வாறு விசுவரூபம் கொண்டு மனிதர்களின் வாழ்க்கையைப் புரட்டிவிடுகிறது என்பதைக் காட்டுகிறது உயிரறிதல் கதை.

இசை வழியும் உடலின் சித்திரம் சிறுகதையை வேறு வகையில் முயன்று பார்த்திருக்கிறார் ஆசிரியர். பழுப்பு இலையில் காலங்கடந்தும் மணமாகாத ஒரு பெண்ணின் தவிப்பை வீட்டின் முன் அவள் நட்ட ஒரு முருங்கை மரத்துடன், பூவரசுவைப் போலவே, இணைத்துக் காட்டுகிறார்.

தொகுப்பின் பெருங்கதை அல்லது குறுநாவல்தான் செல்லி. செல்லியின் பயணத்துடன் நிறையூர்க்கன்னியின் கதையும் இணைய, தமிழில் மிகவும் குறிப்பிடக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது.   அண்மையில் வெளியான கவனிக்கப்பட வேண்டிய சிறுகதைத் தொகுப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.