சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

DIN

யாதும் ஊரே யாவரும் கேளிர் (தமிழ்-சமூகம்-திருக்குறள்), வி.ஜி.சந்தோசம், பக்.244; ரூ.250, சந்தனம்மாள் பதிப்பகம், சென்னை-15; ✆ 044-6625 9999.

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, பிலிப்பின்ஸ், கம்போடியா,  நார்வே, ஆஸ்திரேலியா, மாலத்தீவு  உள்பட தமிழர்கள் பரவியுள்ள நாடுகளுக்குச் சென்று வந்துள்ள நூலாசிரியர் தனது பயண அனுபவங்களை எளிய நடையில் பகிர்ந்துள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் தமிழ் உணர்வு, தமிழ்ப் பற்று, தமிழ்ச் செல்வாக்கு; பொங்கல் பண்டிகை உலக நாடுகளில் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?, பழந்தமிழரின் தன்னிகரற்ற படைப்பான தொல்காப்பியத்தின் சிறப்புகள், இலங்கையில் தமிழ் சொல்லாக்கம், உலக நாடுகளில் பரவியுள்ள தமிழும் தமிழரும் குறித்த தகவல்கள் வியப்பூட்டுகின்றன.  தமிழர்கள் மேற்கொண்ட கடற்பயணத்தின் எச்சங்கள் உலகின் பல பாகங்களில் மிச்சமிருப்பதை அறிய முடிகிறது. நம் நிலப்பரப்பை ஆட்சி செய்த மன்னர்களின் காலப் பகுப்பு, குறிப்பாக,  சோழ மன்னர்களின் தனிச்சிறப்புகள், கட்டடக் கலைகள் குறித்த பயனுள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 

பழந்தமிழருக்கு காலனிப்படுத்துதல் குறித்த கண்ணோட்டம் இருந்திருந்தால் இந்தியாவுக்கு கிழக்கே ஜப்பானிய கடற்கரை வரையிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் இன்று தமிழ் மொழியே ஆட்சி மொழியாக இருந்திருக்கும் என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது. 

'திருக்குறள் சிந்தனைகள்'  பகுதியில் குமரிமுனை, நாவினால் சுட்ட வடு, இல்லறத்தின் மாண்பு, அன்பில் பெருமை போன்ற துணைத் தலைப்புகளின் கீழ் திருக்குறள்களை பட்டியலிட்டு  வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை மேற்கோள் காட்டியிருப்பது கூடுதல் சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.