சென்னை: சென்னையில் 300 முக்கிய சாலைகளில் சுமார் ரூ.20 கோடி மதிப்பில் அதிநவீன வழிகாட்டிப் பலகைகளை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
வழிகாட்டிப் பலகைகளில் வெறும் ஊர்களின் பெயர்கள் மட்டும் எழுத்துகளில் இடம்பெறுவதோடு, பாமர மக்களுக்கும் எளிதில் புரியக்கூடிய வகையில் படங்களுடன், போக்குவரத்து தொடர்பான விவரங்கள் இடம்பெறும் வகையில் நவீன வழிகாட்டிப் பலகைகள் உருவாக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் தெரியாதவர்களும் வெளிமாநிலத்தவரும் சாலைகளை அறிந்துகொள்ளவும், எந்தப் பகுதிக்கு எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை புரிந்து கொள்ளும் வகையில் சென்னையின் முக்கிய சாலைகளில் இந்த வழிகாட்டிப் பலகைகள் இடம்பெறவிருக்கின்றன.
முதல்கட்டமாக, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்டப் பகுதிகளில் ரூ.20 கோடி செலவில் அதிநவீன வழிகாட்டி பலகைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் விபத்துகளை தவிர்க்கவும் வாகன ஓட்டிகளுக்கு பல வகைகளில் வழிகாட்டி பலகைகள் உதவும் வகையில் உருவாக்கப்பட்டு, சென்னையில் 300 முக்கிய சாலைகளில் பொருத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சென்னையில் ஃபியூஸ் கேரியர் திருட்டால் மின்வெட்டு: 2 பேர் கைது!

சென்னையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!
சென்னையில் மேகமூட்டம் ஏன்? வானிலை மையம் விளக்கம்

நெடுஞ்சாலை அறிவிப்புப் பலகைகளை ஆக்கிரமிக்கும் சுவரொட்டிகள்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



