சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

உயர... உயர... எண்ணங்களாலும் செயல்களாலும்

News image
Updated On :25 செப்டம்பர் 2023, 9:58 am

DIN

உயர... உயர... எண்ணங்களாலும் செயல்களாலும் - சோம. வள்ளியப்பன்; பக்.144, ரூ.175; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14; ✆ 044-4200-9603.

நம்மிடம் இல்லாததை பெரிதாக நினைத்து அதை நோக்கி ஓடிக்கொண்டே நம்மிடம் இருப்பதை மறந்து விடுகிறோம். இதுபோன்ற வாழ்வின் சிறு சிறு சந்தோஷங்களை தேடுதலில் தொலைக்காமல் அந்த நிமிஷமே அனுபவிப்பது குறித்து பல்வேறு உதாரணங்களுடன் விவரிக்கிறார் சோம.வள்ளியப்பன்.

பணம் மட்டுமே குறிக்கோள் என்றில்லாமல் மனம் விரும்புவதை முழு ஈடுபாட்டுடன் செய்யும் போது அவர்கள் பக்கம் பணம் கொட்டுகிறது. பணத்தை தேடி ஓடும்போது நமக்கான உறவுகளை மறந்து விடுகிறோம். அப்படி தனக்கு நெருக்கமான உறவுகளை தக்கவைக்க 5 வகையான அன்பின் மொழிகளை இதில் சிறப்பாக கூறியுள்ளார். தீபாவளி போன்ற பண்டிகை
களுக்கு மட்டும் குடும்பங்கள், நண்பர்களுடன் மகிழ்ச்சியை தேடும் நாம் - தினம் தினம் அதை அனுபவிப்பதை தவறிவிடுகிறோம். சொந்த வீடு வாங்கிய பிறகு, அதிகாரியான பிறகு என பலர் மகிழ்ச்சியை  எதிர்காலத்தில் தேடுகின்றனர். 

சிலர் சுயநலம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு வாழ்வில் வேறு விழுமியங்களின்றி வாழ்வர். அவர்களின் உலகம் மிகச்சிறியது. அதில் அவர்கள் மட்டுமே இருப்பார்கள். பாரதி, வள்ளலார் போன்றோர் தன்னைத் தாண்டி உலகின் ஒவ்வொரு உயிரின் நலனையும் மையமாகக் கொண்டு யோசிப்பவர்களாக திகழ்வர். இதுபோன்று வாழ்வில் பொருளாதாரத்தில் மட்டுமின்றி உறவு, மனநிம்மதி, ஆளுமை என அனைத்திலும் புதிய உயரங்களை அடைந்து ஒரு பறவையைப் போல சிறகுகள் விரித்து உயர, உயர பறக்க விரும்புபவர்களுக்கான புத்தகம் இது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.