எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மூங்கில் மூச்சு

சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும் நூல் இது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2024, 1:26 pm

DIN

மூங்கில் மூச்சு - சுகா; பக். 216; ரூ.250; சுவாசம் பதிப்பகம், சென்னை-187; ✆81480 66645.

ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. நூலாசிரியர் தான் பிறந்து வளர்ந்த திருநெல்வேலியிலும், திரைத் துறைப் பணிக்காக வந்த சென்னையிலும் கிடைத்த அனுபவங்களை சுவாரசியமான நடையில் எழுதியுள்ளார்.

பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணியில் தொடங்கி, 33 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. திருநெல்வேலிக்காரர்களுக்கு தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமன்று; குடும்பத்தில் ஓர் உறுப்பினர் என தாமிரபரணியைப் போற்றி தொடங்கும் முதல் கட்டுரையே நூலை ஒரே மூச்சில் படித்து முடிக்கத் தூண்டும் உத்வேகத்தை அளிக்கிறது.

வாத்தியார் என்று நூலாசிரியரால் அழைக்கப்படும் இயக்குநர் பாலுமகேந்திராவின் மாணவர்களை அறிமுகப்படுத்தும் 'வாத்தியாரும் மாணவர்களும்' கட்டுரை சினிமா ஆர்வலர்களுக்கு பல ஆச்சரியங்களைத் தரும்.

இலங்கை வானொலியில் நிகழ்ச்சிகள், வானொலி அறிவிப்பாளர்கள் குறித்த கட்டுரை இளம்தலைமுறையினருக்கு புதியதாக இருக்கும்; முந்தைய தலைமுறையினருக்கு பழைய சினிமா நினைவுகளை அசைபோட வைக்கும்.

திருநெல்வேலியில் தன் சக மனிதர்களை கட்டுரைகளில் உலாவவிட்டு இத்தனை காலம் கடந்தும் அவர்களை நினைவில் வைத்திருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது.

நெல்லைத் தமிழின் மணம் நூல் முழுக்க பரவிக் கிடக்கிறது. நூலாசிரியரின் நண்பன் குஞ்சு போல ஒவ்வொருவருக்கும் இருந்த பால்ய நட்பை நினைவுபடுத்துகின்றன கட்டுரைகள். சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும் நூல் இது.

மூங்கில் மூச்சு - சுகா; பக். 216; ரூ.250; சுவாசம் பதிப்பகம், சென்னை-187; ✆81480 66645.

ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. நூலாசிரியர் தான் பிறந்து வளர்ந்த திருநெல்வேலியிலும், திரைத் துறைப் பணிக்காக வந்த சென்னையிலும் கிடைத்த அனுபவங்களை சுவாரசியமான நடையில் எழுதியுள்ளார்.

பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணியில் தொடங்கி, 33 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. திருநெல்வேலிக்காரர்களுக்கு தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமன்று; குடும்பத்தில் ஓர் உறுப்பினர் என தாமிரபரணியைப் போற்றி தொடங்கும் முதல் கட்டுரையே நூலை ஒரே மூச்சில் படித்து முடிக்கத் தூண்டும் உத்வேகத்தை அளிக்கிறது.

வாத்தியார் என்று நூலாசிரியரால் அழைக்கப்படும் இயக்குநர் பாலுமகேந்திராவின் மாணவர்களை அறிமுகப்படுத்தும் 'வாத்தியாரும் மாணவர்களும்' கட்டுரை சினிமா ஆர்வலர்களுக்கு பல ஆச்சரியங்களைத் தரும்.

இலங்கை வானொலியில் நிகழ்ச்சிகள், வானொலி அறிவிப்பாளர்கள் குறித்த கட்டுரை இளம்தலைமுறையினருக்கு புதியதாக இருக்கும்; முந்தைய தலைமுறையினருக்கு பழைய சினிமா நினைவுகளை அசைபோட வைக்கும்.

திருநெல்வேலியில் தன் சக மனிதர்களை கட்டுரைகளில் உலாவவிட்டு இத்தனை காலம் கடந்தும் அவர்களை நினைவில் வைத்திருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது.

நெல்லைத் தமிழின் மணம் நூல் முழுக்க பரவிக் கிடக்கிறது. நூலாசிரியரின் நண்பன் குஞ்சு போல ஒவ்வொருவருக்கும் இருந்த பால்ய நட்பை நினைவுபடுத்துகின்றன கட்டுரைகள். சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும் நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.