எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஒரு திராவிடப் புதிர்

ஒரு திராவிடப் புதிர் - நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபணு வரலாறு - இராம. பிச்சப்பன்; பக். 304; ரூ. 600; பிச்சு அறக்கட்டளை, கே. புதூர், மதுரை - 625 007. ✆ 94430 66798.

News image
ஒரு திராவிடப் புதிர்
Updated On :22 ஜூலை 2024, 3:20 pm

DIN

ஒரு திராவிடப் புதிர் - நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபணு வரலாறு - இராம. பிச்சப்பன்; பக். 304; ரூ. 600; பிச்சு அறக்கட்டளை, கே. புதூர், மதுரை - 625 007. ✆ 94430 66798.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆராய்ச்சித் தகவல், மதுரை அருகே ஜோதி மாணிக்கம் என்ற கிராமத்தில் வசிக்கும் விருமாண்டி என்பவர், 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து கடற்கரை வழியே வந்து இந்தியாவில் குடியேறிய முதல் மனிதனின் வழித்தோன்றல் என்பது. இந்தக் கண்டுபிடிப்பில் முக்கிய பங்காற்றியவரான ஓய்வுபெற்ற உயிரியல் துறை பேராசிரியரான இராம. பிச்சப்பன் எழுதியுள்ள நூல் இது.

செட்டிநாட்டில் நகரத்தார் சமூகத்தில் பிறந்த 174 பேரின் டி.என்.ஏ. மாதிரிகளை எடுத்துக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நகரத்தார் மரபணு வரலாற்று ஆய்வு, இவர்கள் எவ்வாறு தனிச் சமூகமாகப் பரிணமித்திருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

செட்டி நாட்டு மக்கள் வசிக்கும் ஊர்களைக் கொண்டு பரவலைப் பற்றி விவாதிக்கும் ஆசிரியர், பெருவாரியான ஊர்களில் பிள்ளையார்பட்டி நகரத்தார் குடும்பங்களின் விரிவாக்கம் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். நகரத்தார் மக்களில் எல்1ஏ மரபணு பெரும்பான்மையாக இருக்க, இவர்கள் அனைவரும் ஒரு தந்தை பிள்ளை வாரிசுகள் எனக் கொள்ள வேண்டும்; என்றால் இவர்கள் அனைவரும் எவ்வாறு வெவ்வேறு கிளைகளாகப் பரிணமித்தனர் என்பது கேள்விக்குறி எனக் குறிப்பிட்டுத் தொடர்ந்து ஆராய்கிறார் ஆசிரியர். நூல் நெடுகிலும் தரப்படுகிற ஆய்வுத் தகவல்கள் யாவும் உள்ளபடியே ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்திவிட முடியாத புதிராகத்தான் திராவிடத்தைக் காட்டுகிறது.

50 ஆண்டுகால அறிவியல் பயணத்தில் தாம் அறிந்தவற்றை அனைவரும் அறியத் தருவதாகக் குறிப்பிடுகிறார் ஆசிரியர். மனிதனின் தோற்றம், மக்கள்தொகைப் பரவல் போன்ற அதிக கவனம் குவிக்கப் பெறாத, ஆனால், சமூக அறிவியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை நூல் சிறப்பாக விவாதிக்கிறது. தமிழில் வெளிவந்துள்ள ஆழ்ந்து கற்க வேண்டிய நூல்.

ஒரு திராவிடப் புதிர் - நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபணு வரலாறு - இராம. பிச்சப்பன்; பக். 304; ரூ. 600; பிச்சு அறக்கட்டளை, கே. புதூர், மதுரை - 625 007. ✆ 94430 66798.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆராய்ச்சித் தகவல், மதுரை அருகே ஜோதி மாணிக்கம் என்ற கிராமத்தில் வசிக்கும் விருமாண்டி என்பவர், 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து கடற்கரை வழியே வந்து இந்தியாவில் குடியேறிய முதல் மனிதனின் வழித்தோன்றல் என்பது. இந்தக் கண்டுபிடிப்பில் முக்கிய பங்காற்றியவரான ஓய்வுபெற்ற உயிரியல் துறை பேராசிரியரான இராம. பிச்சப்பன் எழுதியுள்ள நூல் இது.

செட்டிநாட்டில் நகரத்தார் சமூகத்தில் பிறந்த 174 பேரின் டி.என்.ஏ. மாதிரிகளை எடுத்துக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நகரத்தார் மரபணு வரலாற்று ஆய்வு, இவர்கள் எவ்வாறு தனிச் சமூகமாகப் பரிணமித்திருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

செட்டி நாட்டு மக்கள் வசிக்கும் ஊர்களைக் கொண்டு பரவலைப் பற்றி விவாதிக்கும் ஆசிரியர், பெருவாரியான ஊர்களில் பிள்ளையார்பட்டி நகரத்தார் குடும்பங்களின் விரிவாக்கம் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். நகரத்தார் மக்களில் எல்1ஏ மரபணு பெரும்பான்மையாக இருக்க, இவர்கள் அனைவரும் ஒரு தந்தை பிள்ளை வாரிசுகள் எனக் கொள்ள வேண்டும்; என்றால் இவர்கள் அனைவரும் எவ்வாறு வெவ்வேறு கிளைகளாகப் பரிணமித்தனர் என்பது கேள்விக்குறி எனக் குறிப்பிட்டுத் தொடர்ந்து ஆராய்கிறார் ஆசிரியர். நூல் நெடுகிலும் தரப்படுகிற ஆய்வுத் தகவல்கள் யாவும் உள்ளபடியே ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்திவிட முடியாத புதிராகத்தான் திராவிடத்தைக் காட்டுகிறது.

50 ஆண்டுகால அறிவியல் பயணத்தில் தாம் அறிந்தவற்றை அனைவரும் அறியத் தருவதாகக் குறிப்பிடுகிறார் ஆசிரியர். மனிதனின் தோற்றம், மக்கள்தொகைப் பரவல் போன்ற அதிக கவனம் குவிக்கப் பெறாத, ஆனால், சமூக அறிவியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை நூல் சிறப்பாக விவாதிக்கிறது. தமிழில் வெளிவந்துள்ள ஆழ்ந்து கற்க வேண்டிய நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.