பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

தேவதாசி முறை ஒழிப்பில் ஏமி கார்மைக்கேல்

News image
Updated On :13 மே 2024, 7:48 pm IST

தேவதாசி முறை ஒழிப்பில் ஏமி கார்மைக்கேல் - த. ஜான்சி பால்ராஜ்; பக். 96; ரூ. 120; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை- 50; ✆ 044 - 26251968.

முத்துலட்சுமி ரெட்டி, ராமாமிர்தம் அம்மையாருக்கு முன்பாகவே, அதாவது கால் நூற்றாண்டுக்கு முன்னரே தேவதாசி முறை ஒழிப்புப் பணியை மேற்கொண்ட அயர்லாந்து நாட்டுப் பெண்மணியான ஏமி கார்மைக்கேல் பற்றிய அறிமுக நூல்.

முந்தைய நூற்றாண்டுகளில் எளியவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்த கல்வியும் மருத்துவமும் கிடைப்பதில் பெரும் பங்காற்றிய கிறிஸ்துவ சமயப் பணியாளர்களில் பலர், சமூக சீர்

திருத்தங்களிலும் ஈடுபட்டனர். 19 - ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் தேவதாசியாக அர்ப்பணிக்கப்பட்டுத் தப்பி வந்த லட்சுமி என்ற சிறுமிக்கு அடைக்கலம் கொடுத்ததிலிருந்து தொடங்குகிறது ஏமியின் செயல்பாடுகள். பின்னர் நான்குநேரி அருகே டோனாவூரில் காப்பகம் அமைத்து இவ்விஷயத்தில் கூடுதலான அக்கறை செலுத்தத் தொடங்கினார் ஏமி. 1904 -ஆம் ஆண்டில் 6 கோயில்களிலிருந்து 17 குழந்தைகளை மீட்டதாக அவர் குறித்து வைத்துள்ளார். தவிர, தேவதாசிகளாகக் குழந்தைகளைக் கொடுப்பதற்கு எதிராக மக்கள் உதவியுடன் இயக்கமாகவே செயல்பட்டுக் காப்பாற்றி வந்திருக்கிறார் ஏமி.

1919- ஆம் ஆண்டில் இவருடைய சேவையைப் பாராட்டி "கைசர் ஹிந்த்' என்ற விருதினை சென்னை மாகாண ஆளுநரான பென்ட்லாண்ட் பிரபு அளித்திருக்கிறார் என்பதுகூட எங்கேயும் பதிவு செய்யப்படவில்லை. 1951 -ஆம் ஆண்டு வரை வாழ்ந்து தனது 83 - ஆம் வயதில் மறைந்த ஏமி கார்மைக்கேலின் வாழ்க்கையும் சமுதாயத் தொண்டும் ஒப்பிட இயலாதது.

வரலாற்றின் பக்கங்களில் அறியப்படாமல் புதைந்து கிடக்கும் இதுபோன்ற இன்னும் பல ஆளுமைகளை வெளிக்கொண்டுவர வேண்டிய அவசியம் தமிழுக்கு இருக்கிறது என்பதையே ஏமி கார்மைக்கேல் நூல் வெளிப்படுத்துகிறது.

தேவதாசி முறை ஒழிப்பில் ஏமி கார்மைக்கேல் - த. ஜான்சி பால்ராஜ்; பக். 96; ரூ. 120; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை- 50; ✆ 044 - 26251968.

முத்துலட்சுமி ரெட்டி, ராமாமிர்தம் அம்மையாருக்கு முன்பாகவே, அதாவது கால் நூற்றாண்டுக்கு முன்னரே தேவதாசி முறை ஒழிப்புப் பணியை மேற்கொண்ட அயர்லாந்து நாட்டுப் பெண்மணியான ஏமி கார்மைக்கேல் பற்றிய அறிமுக நூல்.

முந்தைய நூற்றாண்டுகளில் எளியவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்த கல்வியும் மருத்துவமும் கிடைப்பதில் பெரும் பங்காற்றிய கிறிஸ்துவ சமயப் பணியாளர்களில் பலர், சமூக சீர்

திருத்தங்களிலும் ஈடுபட்டனர். 19 - ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் தேவதாசியாக அர்ப்பணிக்கப்பட்டுத் தப்பி வந்த லட்சுமி என்ற சிறுமிக்கு அடைக்கலம் கொடுத்ததிலிருந்து தொடங்குகிறது ஏமியின் செயல்பாடுகள். பின்னர் நான்குநேரி அருகே டோனாவூரில் காப்பகம் அமைத்து இவ்விஷயத்தில் கூடுதலான அக்கறை செலுத்தத் தொடங்கினார் ஏமி. 1904 -ஆம் ஆண்டில் 6 கோயில்களிலிருந்து 17 குழந்தைகளை மீட்டதாக அவர் குறித்து வைத்துள்ளார். தவிர, தேவதாசிகளாகக் குழந்தைகளைக் கொடுப்பதற்கு எதிராக மக்கள் உதவியுடன் இயக்கமாகவே செயல்பட்டுக் காப்பாற்றி வந்திருக்கிறார் ஏமி.

1919- ஆம் ஆண்டில் இவருடைய சேவையைப் பாராட்டி "கைசர் ஹிந்த்' என்ற விருதினை சென்னை மாகாண ஆளுநரான பென்ட்லாண்ட் பிரபு அளித்திருக்கிறார் என்பதுகூட எங்கேயும் பதிவு செய்யப்படவில்லை. 1951 -ஆம் ஆண்டு வரை வாழ்ந்து தனது 83 - ஆம் வயதில் மறைந்த ஏமி கார்மைக்கேலின் வாழ்க்கையும் சமுதாயத் தொண்டும் ஒப்பிட இயலாதது.

வரலாற்றின் பக்கங்களில் அறியப்படாமல் புதைந்து கிடக்கும் இதுபோன்ற இன்னும் பல ஆளுமைகளை வெளிக்கொண்டுவர வேண்டிய அவசியம் தமிழுக்கு இருக்கிறது என்பதையே ஏமி கார்மைக்கேல் நூல் வெளிப்படுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.