மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

அம்மன் தரிசனம் தீபாவளி மலர்

ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய மலர் இது.

News image
Updated On :4 நவம்பர் 2024, 1:34 pm

DIN

அம்மன் தரிசனம் தீபாவளி மலர் - 2024; ஜெ.எஸ். பத்மநாபன்; பக். 244; ரூ. 200; சென்னை-17; ✆044- 2434 1674.

அம்மன் தரிசனம் தீபாவளி மலரில் ஆன்மிகம் தொடர்பாக 56 கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

மலரின் முகப்பில் சிருங்கேரி ஸ்ரீ சாரதாபீடாதீஸ்வர ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரையுடன் மலர்ந்துள்ளது.

'செய் நன்றி மறவாதவர்' என்ற கட்டுரையில் ஆசார்களுக்கு சிறு வயதில் உணவு தயாரித்து கொடுத்த சென்னகேசவாவை அழைத்து அவரது சேவையைப் பாராட்டி வெகுமதி அளித்து மகிழ்ந்ததைக் கூறியுள்ளது. புராணங்களின் பெருமை கட்டுரையில் விஷ்ணு புராணம், கருடபுராணம், அக்னி புராணம், நாரத புராணம் எனப் பல்வேறு புராணங்களின் கருத்துகள் எளிய நடையில் கூறப்பட்டுள்ளன. திருமுருகாற்றுப் படை முருகனின் பெருமைகள் சொல்லப்பட்டுள்ளது.

'உண்ணும் உணவும், உள்ளத் தெளிவும்' கட்டுரையில் துறவி, உணவை பிச்சையாக வாங்கி சாப்பிடும்போது அவருக்கான மன நிலையும், அதேசமயம் துறவி விருந்து சாப்பிடும்போது ஏற்படும் மனமாற்றம் குறித்தும் கூறப்பட்டுள்ளது.

'கம்பரும் துளசிதாஸரும்' கட்டுரையில் ராமாயணத்தைக் கையாண்ட விதம் குறித்து மிக அழகாக குறிப்பிடப்பட்டுள்ளது. 'மங்களம் தரும் மந்தஸ்மிதம்' கட்டுரையில் தாயாக விளங்கும் ஆதிபராசக்தியைப் பல்வேறு தெய்வங்களாக வணங்குகிறோம் என சக்தியின் மகிமை குறித்து கூறப்பட்டுள்ளது. ஆன்மிக கதைகள், கோயில்களின் வரலாறும் கூறப்பட்டுள்ளதுடன் , வாழ்க்கை நெறிகளும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய மலர் இது.

அம்மன் தரிசனம் தீபாவளி மலர் - 2024; ஜெ.எஸ். பத்மநாபன்; பக். 244; ரூ. 200; சென்னை-17; ✆044- 2434 1674.

அம்மன் தரிசனம் தீபாவளி மலரில் ஆன்மிகம் தொடர்பாக 56 கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

மலரின் முகப்பில் சிருங்கேரி ஸ்ரீ சாரதாபீடாதீஸ்வர ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரையுடன் மலர்ந்துள்ளது.

'செய் நன்றி மறவாதவர்' என்ற கட்டுரையில் ஆசார்களுக்கு சிறு வயதில் உணவு தயாரித்து கொடுத்த சென்னகேசவாவை அழைத்து அவரது சேவையைப் பாராட்டி வெகுமதி அளித்து மகிழ்ந்ததைக் கூறியுள்ளது. புராணங்களின் பெருமை கட்டுரையில் விஷ்ணு புராணம், கருடபுராணம், அக்னி புராணம், நாரத புராணம் எனப் பல்வேறு புராணங்களின் கருத்துகள் எளிய நடையில் கூறப்பட்டுள்ளன. திருமுருகாற்றுப் படை முருகனின் பெருமைகள் சொல்லப்பட்டுள்ளது.

'உண்ணும் உணவும், உள்ளத் தெளிவும்' கட்டுரையில் துறவி, உணவை பிச்சையாக வாங்கி சாப்பிடும்போது அவருக்கான மன நிலையும், அதேசமயம் துறவி விருந்து சாப்பிடும்போது ஏற்படும் மனமாற்றம் குறித்தும் கூறப்பட்டுள்ளது.

'கம்பரும் துளசிதாஸரும்' கட்டுரையில் ராமாயணத்தைக் கையாண்ட விதம் குறித்து மிக அழகாக குறிப்பிடப்பட்டுள்ளது. 'மங்களம் தரும் மந்தஸ்மிதம்' கட்டுரையில் தாயாக விளங்கும் ஆதிபராசக்தியைப் பல்வேறு தெய்வங்களாக வணங்குகிறோம் என சக்தியின் மகிமை குறித்து கூறப்பட்டுள்ளது. ஆன்மிக கதைகள், கோயில்களின் வரலாறும் கூறப்பட்டுள்ளதுடன் , வாழ்க்கை நெறிகளும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய மலர் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.