எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

உலகக் குடிமகன்

வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புபவர்கள், உலகை அறிய விரும்புபவர்கள், மாணவர்கள் என ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.

News image
Updated On :11 நவம்பர் 2024, 2:04 pm

DIN

உலகக் குடிமகன் - நா.கண்ணன்; பக். 200; ரூ.240; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; ✆ 044-42009603.

தமிழகத்தின் திருப்பூவணத்தில் பிறந்து பெரும்பாலான நாடுகளுக்கு பயணித்த நூலாசிரியரின் வாழ்க்கை வரலாறே இந்த நூல். சூழல் வேதியியல், சூழல் நச்சுவியல் ஆகிய துறைகளில்

உலகின் தலைசிறந்த முதல் பத்து பேராசிரியரும், நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என்று கொண்டாடப்படும் நூலாசிரியர், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் 12-ஆம் வகுப்பு வரை படித்தவர். அவர் வறுமையின் கோரப் பிடியை வெற்றிகரமாகச் சமாளித்து, ஒரு முனைவர் பட்டத்தை மதுரையிலும், மற்றொன்றை ஜப்பானிலும் பெற்றிருக்கிறார் என்கிற செய்தி கல்வி ஒரு மனிதனை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதைக் காட்டுகிறது.

பெரும்பாலான நாடுகளில் பணிபுரிந்திருக்கும் நூலாசிரியர், இந்தியாவைவிட பிற நாடுகள் கல்வி அறிவில், மனித வளத்தில் முன்னிலையில் இருக்கின்றன; இந்தியர்கள் சறுக்கும் இடங்கள்; சரிப்படுத்த வேண்டிய விஷயங்கள் என்பதையெல்லாம் நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளார். பாலை நிலமான இஸ்ரேல் சொட்டு நீர் பாசனத்தை முன்னெடுத்து காய்கறி, பழங்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு தன்னிறைவு பெற்றுள்ளதை கோடிட்டு காட்டுகிறார் நூலாசிரியர். தாய்மொழிப் பற்று, புதுக்கவிதையின் மீதான ஆர்வம், அறிவியலை தமிழ்வழி கற்றல், இணைய இதழ் உள்ளிட்டவற்றில் அவரது ஆர்வம் வியக்க வைக்கிறது.

ஒரு கிராமத்து மனிதன் உலகக் குடிமகனாக மாறியதை விவரிப்பதோடு மட்டுமல்லாது, இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியையும் விளக்குகிறது. வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புபவர்கள், உலகை அறிய விரும்புபவர்கள், மாணவர்கள் என ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.

உலகக் குடிமகன் - நா.கண்ணன்; பக். 200; ரூ.240; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; ✆ 044-42009603.

தமிழகத்தின் திருப்பூவணத்தில் பிறந்து பெரும்பாலான நாடுகளுக்கு பயணித்த நூலாசிரியரின் வாழ்க்கை வரலாறே இந்த நூல். சூழல் வேதியியல், சூழல் நச்சுவியல் ஆகிய துறைகளில்

உலகின் தலைசிறந்த முதல் பத்து பேராசிரியரும், நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என்று கொண்டாடப்படும் நூலாசிரியர், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் 12-ஆம் வகுப்பு வரை படித்தவர். அவர் வறுமையின் கோரப் பிடியை வெற்றிகரமாகச் சமாளித்து, ஒரு முனைவர் பட்டத்தை மதுரையிலும், மற்றொன்றை ஜப்பானிலும் பெற்றிருக்கிறார் என்கிற செய்தி கல்வி ஒரு மனிதனை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதைக் காட்டுகிறது.

பெரும்பாலான நாடுகளில் பணிபுரிந்திருக்கும் நூலாசிரியர், இந்தியாவைவிட பிற நாடுகள் கல்வி அறிவில், மனித வளத்தில் முன்னிலையில் இருக்கின்றன; இந்தியர்கள் சறுக்கும் இடங்கள்; சரிப்படுத்த வேண்டிய விஷயங்கள் என்பதையெல்லாம் நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளார். பாலை நிலமான இஸ்ரேல் சொட்டு நீர் பாசனத்தை முன்னெடுத்து காய்கறி, பழங்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு தன்னிறைவு பெற்றுள்ளதை கோடிட்டு காட்டுகிறார் நூலாசிரியர். தாய்மொழிப் பற்று, புதுக்கவிதையின் மீதான ஆர்வம், அறிவியலை தமிழ்வழி கற்றல், இணைய இதழ் உள்ளிட்டவற்றில் அவரது ஆர்வம் வியக்க வைக்கிறது.

ஒரு கிராமத்து மனிதன் உலகக் குடிமகனாக மாறியதை விவரிப்பதோடு மட்டுமல்லாது, இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியையும் விளக்குகிறது. வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புபவர்கள், உலகை அறிய விரும்புபவர்கள், மாணவர்கள் என ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.