

காலப் பிசாசுகள் (சிறுகதைகள்) - ம.இராசேந்திரன்; பக்.602; ரூ.750; யாவரும் பப்ளிஷர்ஸ், சென்னை-42; ✆ 90424 61472.
தமிழ்ப் பல்கலை. துணை வேந்தராக இருந்த நூலாசிரியருக்கு அறிமுகம் தேவையில்லை. எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர் என்று பல பரிமாணங்களைக் கொண்டு, கணையாழி ஆசிரியராக இன்றும் எழுதிக் கொண்டிருப்பவர்.
'எழுத்தும் ஒரு பிசாசுதான். எழுதி எழுதித்தான் விடுபடவும் பிடிபடவும் வேண்டி இருக்கிறது. இப்படிப் பிசாசுகளிடம் விடுபடவும் பிடிபடவும் கலை இலக்கியங்கள்தான் கைகொடுக்கின்றன. ஐம்பது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருப்பதற்கு இந்த நூலே சாட்சி' என்று கூறுகிறார் நூலாசிரியர்.
தனக்கு அறிமுகமானவர்கள், அவர்களது வாழ்வில் சந்தித்த விஷயங்களையும், தனது வாழ்வில் சந்தித்தவர்களையும் சுவைபட 75 சிறுகதைகளாக்கியுள்ளார்.
எளிய தமிழில் பாமரரும் புரியும் வகையிலான எழுத்துகளை வாசிக்கும்போது, டெல்டாவாழ் பகுதியில் வாழ்ந்த அனுபவமே நேரிடும் வகையில் கதைகளின் ஊடே நூலாசிரியர் கடத்துகிறார்.
பூஜைகள், பண்டிகைகள், திருவிழாக்கள், சுப-துக்க நிகழ்வுகள், கடன் பிரச்னைகள், காதல், என்று பல்வேறு வகையான விஷயங்கள் குறித்து இளைய தலைமுறையினருக்கு நல்லதொரு
புரிதலை இந்த நூல் உண்டாக்கும். நூலை வாசித்து முடித்தவுடன் மனிதர்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகள், சவால்களை சமாளிக்கும் விதம் வியக்கவைத்து, அவருடைய பிற நூல்களை வாசிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகிறது. படிப்போரைக் கவரக் கூடிய நூல் இது.
காலப் பிசாசுகள் (சிறுகதைகள்) - ம.இராசேந்திரன்; பக்.602; ரூ.750; யாவரும் பப்ளிஷர்ஸ், சென்னை-42; ✆ 90424 61472.
தமிழ்ப் பல்கலை. துணை வேந்தராக இருந்த நூலாசிரியருக்கு அறிமுகம் தேவையில்லை. எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர் என்று பல பரிமாணங்களைக் கொண்டு, கணையாழி ஆசிரியராக இன்றும் எழுதிக் கொண்டிருப்பவர்.
'எழுத்தும் ஒரு பிசாசுதான். எழுதி எழுதித்தான் விடுபடவும் பிடிபடவும் வேண்டி இருக்கிறது. இப்படிப் பிசாசுகளிடம் விடுபடவும் பிடிபடவும் கலை இலக்கியங்கள்தான் கைகொடுக்கின்றன. ஐம்பது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருப்பதற்கு இந்த நூலே சாட்சி' என்று கூறுகிறார் நூலாசிரியர்.
தனக்கு அறிமுகமானவர்கள், அவர்களது வாழ்வில் சந்தித்த விஷயங்களையும், தனது வாழ்வில் சந்தித்தவர்களையும் சுவைபட 75 சிறுகதைகளாக்கியுள்ளார்.
எளிய தமிழில் பாமரரும் புரியும் வகையிலான எழுத்துகளை வாசிக்கும்போது, டெல்டாவாழ் பகுதியில் வாழ்ந்த அனுபவமே நேரிடும் வகையில் கதைகளின் ஊடே நூலாசிரியர் கடத்துகிறார்.
பூஜைகள், பண்டிகைகள், திருவிழாக்கள், சுப-துக்க நிகழ்வுகள், கடன் பிரச்னைகள், காதல், என்று பல்வேறு வகையான விஷயங்கள் குறித்து இளைய தலைமுறையினருக்கு நல்லதொரு
புரிதலை இந்த நூல் உண்டாக்கும். நூலை வாசித்து முடித்தவுடன் மனிதர்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகள், சவால்களை சமாளிக்கும் விதம் வியக்கவைத்து, அவருடைய பிற நூல்களை வாசிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகிறது. படிப்போரைக் கவரக் கூடிய நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வரப்பெற்றோம் (02.03.2026)

வரப்பெற்றோம் (23-02-2026)
உதயபானு கான்மலர்

வரப்பெற்றோம் (16-02-2026)
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

