எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பன்முகப் பார்வையில் தாகூர்

தாகூர் பற்றிய மிகச் சிறந்த - ஆழமான அறிமுக நூல்.

News image
Updated On :16 செப்டம்பர் 2024, 8:20 am

DIN

பன்முகப் பார்வையில் தாகூர் - வீ.பா. கணேசன்; பக். 168; ரூ. 200; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14; ✆044 - 42009603.

வங்கத்தின் மகாகவி ரவீந்திரநாத் தாகூரையும் தமிழின் மகாகவி பாரதியையும் முழுவதுமாகக் கற்றறிந்து ஒப்பிட்டு விவாதித்த காலமும் இருந்தது. இன்றைய தலைமுறையினருக்கு தாகூர் வாழ்க்கைச் சித்திரத்தைத் தொடர்ந்து அவருடைய படைப்புலகத்தைப் பற்றி எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.

'தாகூர் கவிஞர் மட்டுமல்லர்; நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர், ஓவியர் எனப் பன்முகம் கொண்டவர்' என்பதை ஏராளமான தகவல்களுடன் சிறப்பாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.

இசைப் பிரியர்களின் விருப்பமான ரவீந்திர சங்கீதத்தின் வரலாறு, பின்னணியுடன், அவருடைய இசைப்பாடல்களில் தவறு நேர்ந்துவிடக் கூடாது என்பதில் ரவீந்திரர் எந்த அளவு

அக்கறை கொண்டிருந்தார் என்பதும் விளக்கப்படுகிறது. தாகூரின் நாடகப் பயணம் பற்றி விவரிப்பதுடன், கதைக்களன் இயலில் சிறுகதைகள், நாவல்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இவை இன்னமும்கூட விரிவாக எழுதப்பட வேண்டிய விஷயங்கள்.

கட்டுரைகள், கடிதங்கள், சொற்பொழிவுகளை அறிமுகப்படுத்தும் ஆசிரியர், ஓவியக் கலை, திரைப்படக் கலை, கல்விப் புலம், ஊரக வளர்ச்சி என ரவீந்திரர் தொடர்பான அனைத்து விஷயங்களையும் தொட்டுக் காட்டியிருக்கிறார்.

ரவீந்திரருக்கும் மகாத்மா காந்திக்கும் இடையிலான உறவையும் வேற்றுமையில் ஒற்றுமையையும் கோடிட்டுக் காட்டியிருப்பதுடன், 'ஒரே தலைமுறையில் பிறந்த இதுபோன்ற இரண்டு தனிச்சிறப்புமிக்க ஆளுமைகள்' என்ற ஜவாஹர்லால் நேருவின் கடித வரிகளை மேற்கோள் காட்டியிருக்கிறார். தாகூர் பற்றிய மிகச் சிறந்த - ஆழமான அறிமுக நூல்.

பன்முகப் பார்வையில் தாகூர் - வீ.பா. கணேசன்; பக். 168; ரூ. 200; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14; ✆044 - 42009603.

வங்கத்தின் மகாகவி ரவீந்திரநாத் தாகூரையும் தமிழின் மகாகவி பாரதியையும் முழுவதுமாகக் கற்றறிந்து ஒப்பிட்டு விவாதித்த காலமும் இருந்தது. இன்றைய தலைமுறையினருக்கு தாகூர் வாழ்க்கைச் சித்திரத்தைத் தொடர்ந்து அவருடைய படைப்புலகத்தைப் பற்றி எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.

'தாகூர் கவிஞர் மட்டுமல்லர்; நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர், ஓவியர் எனப் பன்முகம் கொண்டவர்' என்பதை ஏராளமான தகவல்களுடன் சிறப்பாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.

இசைப் பிரியர்களின் விருப்பமான ரவீந்திர சங்கீதத்தின் வரலாறு, பின்னணியுடன், அவருடைய இசைப்பாடல்களில் தவறு நேர்ந்துவிடக் கூடாது என்பதில் ரவீந்திரர் எந்த அளவு

அக்கறை கொண்டிருந்தார் என்பதும் விளக்கப்படுகிறது. தாகூரின் நாடகப் பயணம் பற்றி விவரிப்பதுடன், கதைக்களன் இயலில் சிறுகதைகள், நாவல்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இவை இன்னமும்கூட விரிவாக எழுதப்பட வேண்டிய விஷயங்கள்.

கட்டுரைகள், கடிதங்கள், சொற்பொழிவுகளை அறிமுகப்படுத்தும் ஆசிரியர், ஓவியக் கலை, திரைப்படக் கலை, கல்விப் புலம், ஊரக வளர்ச்சி என ரவீந்திரர் தொடர்பான அனைத்து விஷயங்களையும் தொட்டுக் காட்டியிருக்கிறார்.

ரவீந்திரருக்கும் மகாத்மா காந்திக்கும் இடையிலான உறவையும் வேற்றுமையில் ஒற்றுமையையும் கோடிட்டுக் காட்டியிருப்பதுடன், 'ஒரே தலைமுறையில் பிறந்த இதுபோன்ற இரண்டு தனிச்சிறப்புமிக்க ஆளுமைகள்' என்ற ஜவாஹர்லால் நேருவின் கடித வரிகளை மேற்கோள் காட்டியிருக்கிறார். தாகூர் பற்றிய மிகச் சிறந்த - ஆழமான அறிமுக நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.