சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தமிழியலும் கோயில் பண்பாடும் - (தொகுப்பும் பதிப்பும்)

சென்னை துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட 31 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 12:34 pm

DIN

தமிழியலும் கோயில் பண்பாடும் - (தொகுப்பும் பதிப்பும்) ப.முருகன்; பக். 300; ரூ.300; துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி தமிழ்த் துறை வெளியீடு, அரும்பாக்கம், சென்னை-106.

சென்னை துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட 31 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.

'கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பது தமிழர்களின் பழமொழி. தமிழர்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைந்துவிட்ட கோயில்களின் வழிபாட்டு முறைகள், பண்பாடு, இலக்கியங்கள், மரபுகள், திருவிழாக்கள், பெண் தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, சடங்குகள், தீப வழிபாடு, உணவுப் பண்பாடு என்று பல்வேறு விஷயங்களை அலசி ஆராயும் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

மயிலை கபாலீஸ்வரர் கோயில், அழகர் கோயில், மங்கலதேவி கண்ணகி கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பிரபல கோயில்களின் தல வரலாறு, அவற்றின் சிறப்புகள், இலங்கை கோயில்களின் சிறப்புகள் போன்றவையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

குடும்பத்தினரிடையே நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையிலே குலதெய்வ வழிபாடுகள் அமைந்திருந்தன என்பன போன்ற வியப்புக்குரிய செய்திகள் நிறைந்திருக்கின்றன. குறி கேட்டல், முளைப்பாரி எடுத்தல், விலங்குகளுக்கு திருமணம் செய்துவைத்தல், மழைச்சோறு, கஞ்சிக் கலயம் எடுத்தல், கல்லெறித் திருவிழா, ஆடி மாதத் திருவிழாக்கள், அம்மன் திருவிழாக்கள் போன்ற வழிபாடுகள் குறித்த விளக்கங்கள் சிறப்புடையதாக இருக்கின்றன.

தமிழியலும் கோயில் பண்பாடும் - (தொகுப்பும் பதிப்பும்) ப.முருகன்; பக். 300; ரூ.300; துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி தமிழ்த் துறை வெளியீடு, அரும்பாக்கம், சென்னை-106.

சென்னை துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட 31 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.

'கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பது தமிழர்களின் பழமொழி. தமிழர்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைந்துவிட்ட கோயில்களின் வழிபாட்டு முறைகள், பண்பாடு, இலக்கியங்கள், மரபுகள், திருவிழாக்கள், பெண் தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, சடங்குகள், தீப வழிபாடு, உணவுப் பண்பாடு என்று பல்வேறு விஷயங்களை அலசி ஆராயும் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

மயிலை கபாலீஸ்வரர் கோயில், அழகர் கோயில், மங்கலதேவி கண்ணகி கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பிரபல கோயில்களின் தல வரலாறு, அவற்றின் சிறப்புகள், இலங்கை கோயில்களின் சிறப்புகள் போன்றவையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

குடும்பத்தினரிடையே நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையிலே குலதெய்வ வழிபாடுகள் அமைந்திருந்தன என்பன போன்ற வியப்புக்குரிய செய்திகள் நிறைந்திருக்கின்றன. குறி கேட்டல், முளைப்பாரி எடுத்தல், விலங்குகளுக்கு திருமணம் செய்துவைத்தல், மழைச்சோறு, கஞ்சிக் கலயம் எடுத்தல், கல்லெறித் திருவிழா, ஆடி மாதத் திருவிழாக்கள், அம்மன் திருவிழாக்கள் போன்ற வழிபாடுகள் குறித்த விளக்கங்கள் சிறப்புடையதாக இருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.