சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

என்ன செய்யப் போகிறோம்?

சமூகவியல், சுற்றுச்சூழலியல் சார்ந்து அறிய விரும்பும் இளம் தலைமுறையினர் மற்றும் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரைத் தொகுப்பு.

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 12:38 pm

DIN

என்ன செய்யப் போகிறோம்?: இரா. கற்பகம்; பக்.156; ரூ.130; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-50; ✆ 044-26359906.

சுற்றுச்சூழல், சமூகப் பிரச்னைகள் குறித்து நூலாசிரியர் தினமணி நாளிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் ஒன்றாக வாழ வேண்டும் என்பது படைப்பின் நியதி. ஆறறிவு பெற்ற மனிதர்கள் இப்பொறுப்பை சரிவர நிறைவேற்றாததால் ஏற்படும் இன்னல்கள் மற்றும் இழப்புகளை கட்டுரைகள் வாயிலாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர்.

அதிலும், சுற்றுச்சூழல் பிரச்னைகளாக காட்டுத்தீ, நீர் மேலாண்மை, வனம் மற்றும் வன விலங்கு பாதுகாப்பு குறித்த கட்டுரைகள் மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

தற்போதைய நவீன உலகிலும் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதை 'சுதந்திர இந்தியாவில் பெண்களின் நிலை' எனும் கட்டுரை விளக்குகிறது. 'பெண்ணுரிமை முழுமை அடைய', 'பாலியல் வன்முறைக்குத் தீர்வு என்ன?', 'பெண்களின் நிலை மேம்படுமா?' ஆகிய கட்டுரைகள் பெண்களுக்கு நிகழும் வன்முறைகளையும், அவற்றிற்கான தீர்வுகளையும் எடுத்துக் கூறுகிறது.

மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், இளம் தலைமுறையினரின் தடுமாற்றங்கள், குடும்ப உறவில் முதியோரின் பங்கு, புலம்பெயர்தலால் ஏற்படும் கலாசாரப் பாதிப்புகள் உள்ளிட்ட கட்டுரைகள், சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசுகின்றன. சமூகவியல், சுற்றுச்சூழலியல் சார்ந்து அறிய விரும்பும் இளம் தலைமுறையினர் மற்றும் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரைத் தொகுப்பு.

என்ன செய்யப் போகிறோம்?: இரா. கற்பகம்; பக்.156; ரூ.130; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-50; ✆ 044-26359906.

சுற்றுச்சூழல், சமூகப் பிரச்னைகள் குறித்து நூலாசிரியர் தினமணி நாளிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் ஒன்றாக வாழ வேண்டும் என்பது படைப்பின் நியதி. ஆறறிவு பெற்ற மனிதர்கள் இப்பொறுப்பை சரிவர நிறைவேற்றாததால் ஏற்படும் இன்னல்கள் மற்றும் இழப்புகளை கட்டுரைகள் வாயிலாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர்.

அதிலும், சுற்றுச்சூழல் பிரச்னைகளாக காட்டுத்தீ, நீர் மேலாண்மை, வனம் மற்றும் வன விலங்கு பாதுகாப்பு குறித்த கட்டுரைகள் மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

தற்போதைய நவீன உலகிலும் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதை 'சுதந்திர இந்தியாவில் பெண்களின் நிலை' எனும் கட்டுரை விளக்குகிறது. 'பெண்ணுரிமை முழுமை அடைய', 'பாலியல் வன்முறைக்குத் தீர்வு என்ன?', 'பெண்களின் நிலை மேம்படுமா?' ஆகிய கட்டுரைகள் பெண்களுக்கு நிகழும் வன்முறைகளையும், அவற்றிற்கான தீர்வுகளையும் எடுத்துக் கூறுகிறது.

மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், இளம் தலைமுறையினரின் தடுமாற்றங்கள், குடும்ப உறவில் முதியோரின் பங்கு, புலம்பெயர்தலால் ஏற்படும் கலாசாரப் பாதிப்புகள் உள்ளிட்ட கட்டுரைகள், சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசுகின்றன. சமூகவியல், சுற்றுச்சூழலியல் சார்ந்து அறிய விரும்பும் இளம் தலைமுறையினர் மற்றும் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரைத் தொகுப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.