சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தமிழ்நாடு தனி மாநிலம் உருவான வரலாறு

தனி மாநிலம் குறித்து தமிழில் ஆதாரப்பூர்வமாக விளக்கும் வெகுசிலவற்றிவ் இந்நூல் மிகுந்த கவனம் பெறுகிறது.

News image
Updated On :10 பிப்ரவரி 2025, 1:21 pm

DIN

தமிழ்நாடு தனி மாநிலம் உருவான வரலாறு - ஆர்.ராதாகிருஷ்ணன்; பக்.208; ரூ.250; சுவாசம் பதிப்பகம், சென்னை-27; ✆ 81480 66645.

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் தமிழ்நாடு மாநிலம் எனப் பெயர் சூட்டப்பட்டது வரையிலான சம்பவங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு வரலாறாக இந்நூலில் தரப்பட்டுள்ளது. முதல் இந்திய சுதந்திர போருக்குப் பிறகு, அன்றைய ஆங்கில நிர்வாகம் இந்தியா முழுமைக்கும் நில அளவை, மக்கள்தொகை கணக்கெடுப்பை முன்னெடுத்தது. இதன் மூலம் ஒவ்வொரு ஜாதியும், மதமும், குறிப்பாக மொழியும் எத்தனை பேரால் பின்பற்றப்படுகிறது என்ற தகவல் வெளிப்பட்டது. இதுவே பின்னர் மொழி ரீதியான மாநில உரிமைக்குரல் எழும்பக் காரணமாக அமைந்தது என நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

சுதந்திர இந்தியாவில் மொழி ரீதியாக முதல் முதலில் பிரிக்கப்பட்ட மாநிலம் ஒடிஸா. இதன் வரலாறும் இந்நூலில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழுக்கு முதன்முதலில் தனி மாநிலம் கோரிக்கையை எழுப்பியவர் ம.பொ.சிவஞானம். மாநிலங்களில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி, தமிழருக்குத் தனி மாநிலம் என குரல் எழுப்பினார் என்றாலும் அவர் அதிகாரமிக்க பதவியில் இல்லாததால் அவரது கோரிக்கை வலுப்பெறவில்லை.

இந்தியப் பிரிவினையால் மொழி வாரியாக மாநிலங்களைப் பிரிப்பதில் ஏற்பட்ட தாக்கம், ஆந்திர தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தது, தென் மாநில எல்லைகளை வரையறுக்க பசல் அலி கமிஷன் அமைத்தது, சங்கரலிங்கனார் மரணம், தமிழ்நாடு தனி மாநிலமானது எனப் பல்வேறு நிகழ்வுகள் இந்நூலில் நேர்த்தியாக தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

தனி மாநிலம் குறித்து தமிழில் ஆதாரப்பூர்வமாக விளக்கும் வெகுசிலவற்றிவ் இந்நூல் மிகுந்த கவனம் பெறுகிறது.

தமிழ்நாடு தனி மாநிலம் உருவான வரலாறு - ஆர்.ராதாகிருஷ்ணன்; பக்.208; ரூ.250; சுவாசம் பதிப்பகம், சென்னை-27; ✆ 81480 66645.

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் தமிழ்நாடு மாநிலம் எனப் பெயர் சூட்டப்பட்டது வரையிலான சம்பவங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு வரலாறாக இந்நூலில் தரப்பட்டுள்ளது. முதல் இந்திய சுதந்திர போருக்குப் பிறகு, அன்றைய ஆங்கில நிர்வாகம் இந்தியா முழுமைக்கும் நில அளவை, மக்கள்தொகை கணக்கெடுப்பை முன்னெடுத்தது. இதன் மூலம் ஒவ்வொரு ஜாதியும், மதமும், குறிப்பாக மொழியும் எத்தனை பேரால் பின்பற்றப்படுகிறது என்ற தகவல் வெளிப்பட்டது. இதுவே பின்னர் மொழி ரீதியான மாநில உரிமைக்குரல் எழும்பக் காரணமாக அமைந்தது என நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

சுதந்திர இந்தியாவில் மொழி ரீதியாக முதல் முதலில் பிரிக்கப்பட்ட மாநிலம் ஒடிஸா. இதன் வரலாறும் இந்நூலில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழுக்கு முதன்முதலில் தனி மாநிலம் கோரிக்கையை எழுப்பியவர் ம.பொ.சிவஞானம். மாநிலங்களில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி, தமிழருக்குத் தனி மாநிலம் என குரல் எழுப்பினார் என்றாலும் அவர் அதிகாரமிக்க பதவியில் இல்லாததால் அவரது கோரிக்கை வலுப்பெறவில்லை.

இந்தியப் பிரிவினையால் மொழி வாரியாக மாநிலங்களைப் பிரிப்பதில் ஏற்பட்ட தாக்கம், ஆந்திர தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தது, தென் மாநில எல்லைகளை வரையறுக்க பசல் அலி கமிஷன் அமைத்தது, சங்கரலிங்கனார் மரணம், தமிழ்நாடு தனி மாநிலமானது எனப் பல்வேறு நிகழ்வுகள் இந்நூலில் நேர்த்தியாக தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

தனி மாநிலம் குறித்து தமிழில் ஆதாரப்பூர்வமாக விளக்கும் வெகுசிலவற்றிவ் இந்நூல் மிகுந்த கவனம் பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.