சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அவள் இவள் உவள்

இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதைகள் பெண்களின் பிரச்னைகளைச் சித்தரிக்கின்றன.

News image
Updated On :10 மார்ச் 2025, 12:28 pm

DIN

அவள் இவள் உவள் - மீரா, கோமதி, நாகஜோதி, காளி; பக்.192; ரூ.250; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை-83; ✆75500 98666.

கரோனா காலம் படைப்புக் காலம். பலரை எழுத வைத்திருக்கிறது. அக்காலத்தில் குழுவாக இருந்து செயல்பட்ட மீரா, கோமதி, நாகஜோதி, காளி ஆகியோர் 'முச்சந்துமன்றம்' அமைப்பின் மூலம் இணைந்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அதன் பரிணாமம்தான் இந்த சிறுகதைத் தொகுப்பு.

பெண்ணைக் கட்டுப்படுத்துவது எது? அதிலிருந்து வெளியே வர உந்துதல் அளிப்பது, அந்தத் தடைகளை, கட்டுப்பாடுகளை தகர்ப்பதற்கான ஆயுதங்களை அடையாளப்படுத்துவது ஆகியவையே இந்த நான்கு படைப்பாளிகளின் நோக்கமாக இருக்கிறது.

'மண்குதிரை' சிறுகதையில் கமலம் வாழ்வில் யாருமே இல்லை. அவளுக்கு எல்லாமே கோவிந்தசாமிதான். அவர் திடீரென இறந்துபோக நிர்க்கதியாகிறாள். ஆணைச் சுற்றியே பெண்ணின் வாழ்க்கை.

டாக்டர் நாகஜோதியின் 'இடைவேளைக்குப் பிறகு' கதையில் வரும் அகிலாவுக்கு தனது விருப்பம் என்ன? என்ன பிடிக்கும் என்பது கூடத் தெரியாது. இதற்கு காரணமே, இப்படியெல்லாம் தெரிவிக்கும் உரிமை கூட அவளுக்கு இல்லை என்பதுதான்.

ஆணைச் சுற்றியே சிந்தனை-அவனது அதிகார எல்லையின்படி பெண்ணுக்கு மகிழ்ச்சிதரும் பிணைப்பு திருமணம் மட்டும்தான். அதிலும் பிசிறு தட்டும்போது வாழ்வில் ஏற்படும் நிச்சயமின்மை பெண்ணை முடக்கிப் போடுகிறது.

இதேபோன்று இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதைகள் பெண்களின் பிரச்னைகளைச் சித்தரிக்கின்றன. சிந்திக்கத் தூண்டுகின்றன.

அவள் இவள் உவள் - மீரா, கோமதி, நாகஜோதி, காளி; பக்.192; ரூ.250; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை-83; ✆75500 98666.

கரோனா காலம் படைப்புக் காலம். பலரை எழுத வைத்திருக்கிறது. அக்காலத்தில் குழுவாக இருந்து செயல்பட்ட மீரா, கோமதி, நாகஜோதி, காளி ஆகியோர் 'முச்சந்துமன்றம்' அமைப்பின் மூலம் இணைந்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அதன் பரிணாமம்தான் இந்த சிறுகதைத் தொகுப்பு.

பெண்ணைக் கட்டுப்படுத்துவது எது? அதிலிருந்து வெளியே வர உந்துதல் அளிப்பது, அந்தத் தடைகளை, கட்டுப்பாடுகளை தகர்ப்பதற்கான ஆயுதங்களை அடையாளப்படுத்துவது ஆகியவையே இந்த நான்கு படைப்பாளிகளின் நோக்கமாக இருக்கிறது.

'மண்குதிரை' சிறுகதையில் கமலம் வாழ்வில் யாருமே இல்லை. அவளுக்கு எல்லாமே கோவிந்தசாமிதான். அவர் திடீரென இறந்துபோக நிர்க்கதியாகிறாள். ஆணைச் சுற்றியே பெண்ணின் வாழ்க்கை.

டாக்டர் நாகஜோதியின் 'இடைவேளைக்குப் பிறகு' கதையில் வரும் அகிலாவுக்கு தனது விருப்பம் என்ன? என்ன பிடிக்கும் என்பது கூடத் தெரியாது. இதற்கு காரணமே, இப்படியெல்லாம் தெரிவிக்கும் உரிமை கூட அவளுக்கு இல்லை என்பதுதான்.

ஆணைச் சுற்றியே சிந்தனை-அவனது அதிகார எல்லையின்படி பெண்ணுக்கு மகிழ்ச்சிதரும் பிணைப்பு திருமணம் மட்டும்தான். அதிலும் பிசிறு தட்டும்போது வாழ்வில் ஏற்படும் நிச்சயமின்மை பெண்ணை முடக்கிப் போடுகிறது.

இதேபோன்று இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதைகள் பெண்களின் பிரச்னைகளைச் சித்தரிக்கின்றன. சிந்திக்கத் தூண்டுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.