தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

நிறைவில் ஒவ்வொரு பிரதானி பற்றியும் எழுதுவதற்குப் பயன்பட்ட ஆதார நூல்களின் பட்டியல்களும் இணைக்கப்பட்டிருப்பது, வாசகர்கள் தொடர்புடைய விஷயங்களை மேலும் தேடிப் படிக்க உதவியாக இருக்கும். நல்ல அறிமுகம்.

News image
Updated On :5 ஜனவரி 2026, 12:41 pm

தினமணி செய்திச் சேவை

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்-மு. பாலகிருஷ்ணன், பக்.288; ரூ. 300; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-21; ✆ 93805 30884.

மதுரையை நாயக்கர்கள் ஆட்சி செய்த காலத்தில் அரச நிர்வாகத்தைக் கவனிக்க முதல் மந்திரி, சேனாதிபதி ஆகிய இரு பதவிகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட பிரதானி என்ற பதவியில் இருந்த மூவரைப் பற்றிய விரிவான வரலாறு நூலாக்கப்பட்டிருக்கிறது.

மதுரையை ஆளுநராக விசுவநாத நாயக்கர் ஆண்டபோது தளவாயாகவும் பிரதானியாகவும் இருந்து, 72 பாளையங்களை உருவாக்கி நிர்வாக சீர்திருத்தங்களை ஏற்படுத்தியவர் அரியநாத முதலியார். காஞ்சி அருகே பிறந்த அரியநாயகம் எவ்வாறு கிருஷ்ணதேவ ராயருக்கு அணுக்கமாகிறார்; மதுரைக்கு விசுவநாத நாயக்கருடன் தளவாயாக ஆளச் செல்கிறார் என்பது விளக்கப்படுவதுடன், திருப்பணிகளும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.

சிவகங்கைச் சீமையின் முதல் மன்னர் சசிவர்ணத் தேவர், அவர் மகன் முத்துவடுகநாதத் தேவர், ராணி வேலு நாச்சியார் ஆட்சிக் காலங்களில் தளவாய் - பிரதானியாக இருந்தவர் தாண்டவராய பிள்ளை. சிவங்கைச் சீமை உருவான வரலாற்றுடன், கர்ணபரம்பரைக் கதையும் தரப்பட்டிருக்கிறது.

சசிவர்ணத் தேவருடன் மட்டுமின்றி, தொடர்ந்து அவர் வாரிசுகளிடமும் பிரதானியாக இருந்த தாண்டவராய பிள்ளை, மதுரையில் நாயக்கர் ஆட்சிக்கு சந்தா சாகிபால் நேரிட்ட பிரச்சினைகளைக் கையாண்ட விதம், தஞ்சை படையெடுப்பு, காளையார்கோவில் படையெடுப்பு, வேலுநாச்சியார் பாதுகாப்பு என வரலாறுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

நிறைவில் ஒவ்வொரு பிரதானி பற்றியும் எழுதுவதற்குப் பயன்பட்ட ஆதார நூல்களின் பட்டியல்களும் இணைக்கப்பட்டிருப்பது, வாசகர்கள் தொடர்புடைய விஷயங்களை மேலும் தேடிப் படிக்க உதவியாக இருக்கும். நல்ல அறிமுகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.