என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!
/

எண்பது பேர் 80 கொலை

தனக்கு ஏற்பட இருக்கும் ஆபத்தை சொல்வேந்தன் உணர்ந்தாரா? உடைத்தெறிந்தாரா? அப்போது அவர் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன? என்பது இந்தப் புதினத்தில் விறுவிறுப்பாகச் சொல்லப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஜூன் 2026, 5:31 pm IST

எண்பது பேர் 80 கொலை- மா. அமரேசன்; பக். 154; ரூ. 200; அறம் பதிப்பகம், திருவண்ணாமலை-632 316, ✆ 91507 24997.

பண்ணை வீட்டில் அமர்ந்து ஜோதிடம் பார்த்து வரும் சொல்வேந்தன், வள்ளுவ மரபில் வந்தவர். படித்த இளைஞர். பணம் காசுக்கு ஆசைப்படாதவர்.

சொல்வேந்தனின் அப்பா குணவேந்தன் ஜோதிடம், சாஸ்திரம் இவை எல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயங்கள் என்று அவற்றை முற்றிலுமாக ஒதுக்கியவர். ஆரம்பப் பள்ளி ஆசிரியர். சொல்வேந்தனின் தந்தை வழி தாத்தா பரசுராமன் சிறந்த ஜோதிடர்.

ஒருநாள் சொல்வேந்தனிடம் ஜோதிடம் பார்க்க அழகான பணக்கார பெண் ஒருவர் வருகிறார். 'என் புருஷன் கிட்ட இருந்து விவாகரத்து கிடைக்குமா என்று பார்த்துச் சொல்லுங்க...' என்று கேட்கிறார்.

அந்தப் பெண்ணிடம், அவளது கணவர் இரண்டு மணி நேரத்துக்கு முன்பு கொல்லப்பட்டார் என்றும், சொத்துக்காக அவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்றும் அதிரடியாகச் சொல்கிறார் சொல்வேந்தன்.

இன்னொரு சம்பவத்தில், இரட்டைக் கொலை வழக்கில் சிறைபட்ட கைதி நிரபராதி என்றும், உண்மைக் குற்றவாளிகளில் காவல் துறையைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்று கூறி, நேர்மையான காவல் ஆய்வாளரை திக்குமுக்காட வைக்கிறார். பின்னர், உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காட்டுகிறார்.

சொல்வேந்தனின் ஜோதிட அறிவு ஒரு பெரும் கொள்ளைக் கூட்டத்தின் கவனத்தை ஈர்க்கிறது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து சொல்ல, சொல்வேந்தனைக் கடத்தத் திட்டமிடுகிறது.

தனக்கு ஏற்பட இருக்கும் ஆபத்தை சொல்வேந்தன் உணர்ந்தாரா? உடைத்தெறிந்தாரா? அப்போது அவர் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன? என்பது இந்தப் புதினத்தில் விறுவிறுப்பாகச் சொல்லப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.