சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மனம் எனும் ஞானி

மனக் குழப்பங்கள், சஞ்சலங்கள், அச்சம், விடை தெரியாத வினாக்களுக்கான விளக்கம், பிரபஞ்ச ரகசியம் போன்றவற்றுக்கான விடைகளை இந்த நூல் உணர்த்துகிறது.

News image
Updated On :2 மார்ச் 2026, 12:37 pm

தினமணி செய்திச் சேவை

மனம் எனும் ஞானி- மானோஸ்; பக்.144; ரூ.150; ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை-600 017, ✆ 044- 24331510.

உலகம் தோன்றியது எப்படி?, மனிதர்கள் எப்படி தோன்றினர், மனக் குழப்பங்கள் ஏன்?, மாயத்தோற்றம், கனவுகளும் பயமும் ஏன்?, பூமியின் வளர்ச்சி, உயிரினங்களின் தோற்றம், சப்தம், ஆத்மா, ஈர்ப்பு சக்தி, மனிதநேயம், இயற்கை உள்ளிட்ட பல்வேறு விடைதெரியாத விஷயங்களுக்கு நூலாசிரியர் தெளிவாக விளக்கம் அளிக்கிறார்.

தத்துவ அறிவு, விஞ்ஞான அறிவு, கணித அறிவு ஆகிய மூன்றும் மனிதர்கள் பிறக்கும்போதே விருத்தியாகிறது என்றும், விஞ்ஞானமும் தத்துவமும் வளர்கின்ற இடத்தில் ஆன்மிகமும் வளரும் என்றும் நூலாசிரியர் கூறுகிறார். அப்போது, போதும் என்ற மனம் மனிதர்களுக்கு வந்துவிடும்; பொருளைத் தேடுவதிலேயே ஆயுளைக் கழித்து ஆயுளை முடிப்போர் ஆத்ம நிறைவு இல்லாமல், தவிக்கத் தொடங்குவர் என்றும் விளக்குகிறார்.

நாகரிக வளர்ச்சி பெறாத காலத்தில் விலங்குகளுக்காக அச்சமுற்ற மனிதன் மரத்தைக் கட்டிப்பிடித்தவாறு தூங்கும்போது, இரவில் அச்சத்தில் விழிப்பதன் எதிரொலியே "கனவு'. இயற்கையைப் பார்த்து அச்சமுற்ற மனிதர்களுக்கு ஏற்பட்டதே "பயம்', அவ்விரண்டும் மரபணு வழியாக இன்றும் மனிதர்களுக்கு ஏற்படுகிறது.

மெய்யறிவைப் பெறும்போது, நமது வாழ்வு நிறைவு பெறுகிறது; அதை இந்தப் பிறவியில் பெறாவிட்டால் அடுத்தடுத்த பிறவிகளும் தொடரும். மாயாஜால வித்தைகள், ஆவிகள், சமாதி நிலை, சித்தி அடைதல், தியானம் போன்றவற்றுக்கு நல்லதொரு விளக்கம் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது.

உண்மையான மெய்யறிவைப் பெறுவதற்கான வழிகள், விளக்கங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மனக் குழப்பங்கள், சஞ்சலங்கள், அச்சம், விடை தெரியாத வினாக்களுக்கான விளக்கம், பிரபஞ்ச ரகசியம் போன்றவற்றுக்கான விடைகளை இந்த நூல் உணர்த்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.