அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் அவசர கூட்டம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

செயற்கை நுண்ணறிவு

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி) 5 செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளை இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்து நூலில் இடம்பெற்றுள்ள தகவல் மூலம் மாணவர்கள் மட்டுமின்றி, பணிபுரியும் தொழில் வல்லுநர்களும் பயனடையலாம்.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

செயற்கை நுண்ணறிவு- அக்கினி பாரதி; பக். 140; ரூ. 150; கனவுத்தமிழ் பதிப்பகம், சென்னை- 600 131, ✆ 98403 21522.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகெங்கிலும் பல்வேறு துறைகளில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது என்பதை மறுக்க முடியாது. அந்தத் தொழில்நுட்பம், அதைப் படிப்பதில் உள்ள நன்மைகள், செயற்கை நுண்ணறிவு குறித்த அச்சம் உள்ளிட்டவை குறித்து நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.

மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தத் தொழில்நுட்பம், நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தாலும், உலகம் முழுவதும் 30 கோடி பேர் முழுநேரமாக செய்து வரும் பணிகளை இந்தத் தொழில்நுட்பம் முற்றிலுமாக மாற்றியமைத்து, அந்தப் பணிகள் அனைத்தும் இயந்திரமயமாகும் என்று அமெரிக்க ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மனிதர்களின் வேலையை இந்தத் தொழில்நுட்பம் பறித்துக்கொள்ளுமோ என்ற அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

அதேவேளையில், உலகிலேயே முதல்முறையாக முற்றிலும் இந்தத் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் மருத்துவமனையை சீனா அறிமுகப்படுத்தி, மருத்துவ சேவையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்தியாவிலும் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு ரத்தப் பரிசோதனை தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டு ஊசி இல்லாமல், ரத்தம் எடுக்காமல் கேமரா முன் முகத்தைக் காட்டுவதன் மூலம் ரத்தப் பரிசோதனை முடிவுகளைப் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் வீச்சை எடுத்துரைக்கிறது.

12-ஆம் வகுப்புக்குப் பிறகு செயற்கை நுண்ணறிவு படிப்புக்கான சிறந்த கல்லூரிகள், கட்டணம் குறித்து நூலில் விவரிக்கப்பட்டுள்ளது பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி) 5 செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளை இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்து நூலில் இடம்பெற்றுள்ள தகவல் மூலம் மாணவர்கள் மட்டுமின்றி, பணிபுரியும் தொழில் வல்லுநர்களும் பயனடையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.