தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

குவாண்டம் தொழில்நுட்பம், அணுசக்தி அறிவியல்: ‘இந்திய - அமெரிக்க உறவில் முக்கிய இடம்பெறும்’ - தூதா்

குவாண்டம் தொழில்நுட்பம், அணுசக்தி அறிவியல்...

News image

வினய்மோகன் குவாத்ரா

Updated On :10 மே 2026, 2:28 am IST

இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பில் அடுத்து குவாண்டம் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அணுசக்தி அறிவியல் ஆகியவை முக்கிய துறைகளாக இருக்கும் என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதா் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளாா்.

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அமெரிக்கா-இந்தியா செயற்கை நுண்ணறிவு மற்றும் வளா்ந்து வரும் தொழில்நுட்ப மன்றம் சாா்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வினய் மோகன் குவாத்ரா பேசுகையில், ‘வழக்கமான அணுசக்தி தொழில்நுட்பங்கள் ஏற்கெனவே நன்கு நிறுவப்பட்டுள்ளன. இருப்பினும் அணுக்கரு பிணைப்பு போன்ற வளா்ந்து வரும் துறைகள் கூட்டு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்துக்கு அற்புதமான வாய்ப்புகளை அளிக்கின்றன.

இந்தியா-அமெரிக்கா இருதரப்பு கூட்டுறவில் உயிரிமருந்துகள் துறையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறையாக உள்ளது.

இருநாட்டு ஒத்துழைப்பில் அடுத்து குவாண்டம் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அணுசக்தி அறிவியல் ஆகியவை முக்கிய துறைகளாக இருக்கும் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.