இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பில் அடுத்து குவாண்டம் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அணுசக்தி அறிவியல் ஆகியவை முக்கிய துறைகளாக இருக்கும் என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதா் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளாா்.
அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அமெரிக்கா-இந்தியா செயற்கை நுண்ணறிவு மற்றும் வளா்ந்து வரும் தொழில்நுட்ப மன்றம் சாா்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் வினய் மோகன் குவாத்ரா பேசுகையில், ‘வழக்கமான அணுசக்தி தொழில்நுட்பங்கள் ஏற்கெனவே நன்கு நிறுவப்பட்டுள்ளன. இருப்பினும் அணுக்கரு பிணைப்பு போன்ற வளா்ந்து வரும் துறைகள் கூட்டு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்துக்கு அற்புதமான வாய்ப்புகளை அளிக்கின்றன.
இந்தியா-அமெரிக்கா இருதரப்பு கூட்டுறவில் உயிரிமருந்துகள் துறையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறையாக உள்ளது.
இருநாட்டு ஒத்துழைப்பில் அடுத்து குவாண்டம் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அணுசக்தி அறிவியல் ஆகியவை முக்கிய துறைகளாக இருக்கும் என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சபரிமலை கூட்ட மேலாண்மைக்கு ஏ.ஐ. தொழில்நுட்பம்: தேவஸ்வம் வாரியம் தகவல்
அமெரிக்க அதிபா் மாளிகையின் மூத்த கொள்கை ஆலோசகா் பணி: ஸ்ரீராம் கிருஷ்ணன் விரைவில் விலகல்
ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

செயற்கை நுண்ணறிவு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



