அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் அவசர கூட்டம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

முதல் சபாநாயகர் ஜெ. சிவசண்முகம் பிள்ளை வரலாறு

சட்டப் பேரவைத் தலைவராக இருந்தபோதும், அவர் எளிமையாக இருந்ததும், சைக்கிளிலும், நடந்து சென்றதும் படிக்கும்போது இன்றைய அரசியல்வாதிகளுக்குப் படிப்பினையாக இருக்கும்.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

முதல் சபாநாயகர் ஜெ. சிவசண்முகம் பிள்ளை வரலாறு- கவிஞர் எழிலிறைவன், முருகு.சுந்தரேச.புனிதவதி; பக். 120; ரூ. 150; பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்க வெளியீடு, சென்னை-600 021, ✆ 99622 14491.

விடுதலைக்குப் பிந்தைய தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவைத் தலைவராகவும் (1951-55), சென்னையின் முதல் மேயராகவும் (1937-38), வேறு பல பொறுப்புகளிலும் திறம்பட செயலாற்றிய ஜெ. சிவசண்முகம் பிள்ளையின் முழு வரலாற்று நூல் இது. 1901-ஆம் ஆண்டு பிப். 24-ஆம் தேதி பிறந்த இவர், 1975-ஆம் ஆண்டு பிப். 1-ஆம் தேதி மறைந்தார்.

காங்கிரûஸ சேர்ந்த இவர், பட்டியலினத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர். இந்த நூலை 1990-ஆம் ஆண்டில் சிறப்பாக எழுதி வைத்திருந்த அவரது மகள், சிவசண்முகம் பிள்ளையின் 125-ஆவது பிறந்த ஆண்டில் பதிப்பித்திருக்கின்றார்.

ஆங்கிலேயர் மாளிகையில் நேர்முக உதவியாளராகப் பணியாற்றி வந்த ஜெகன்னாதன்-ஜெயலட்சுமி தம்பதியின் மகனாகப் பிறந்தவர் சிவ. சண்முகம். இவரது கல்விப் பணி, இளமை வாழ்க்கை, மகாஜன சபை, சமுதாயத் தொண்டு, தமிழ் இலக்கியப் பணி, நூலாசிரியர், பொதுவாழ்க்கைப் பணி, கோயில்கள் நுழைவு, தமிழக அரசியல், ராஜாஜி உள்ளிட்ட தலைவர்களுடனான நட்பு, சட்டப்பேரவையில் அவரது சாதுர்யம், ஏழைகளின் பங்காளனாக இருந்தது என்று அவரது வாழ்க்கை முழுவதும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவைத் தலைவராக இருந்தபோதும், அவர் எளிமையாக இருந்ததும், சைக்கிளிலும், நடந்து சென்றதும் படிக்கும்போது இன்றைய அரசியல்வாதிகளுக்குப் படிப்பினையாக இருக்கும்.

தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், ஏழை எளிய மக்களுக்காகவும் வாழ்ந்ததுடன் பல்வேறு உயர்பதவிகளை வகித்தாலும் எளிமையாகவே வாழ்ந்த அரசியல் தலைவர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு வியக்க வைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.