தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

கேளாத கதை (வ.உ.சி.யின் சிறை போராட்ட வரலாறு)

அதிகாரபூர்வமான காங்கிரஸ் சரித்திர நூலில் வ.உ.சி. குறித்து ஒரு வரி இல்லை. 50 ஆயிரம் பக்கங்கள் கொண்ட காந்திஜி தொகுப்பிலும் இவரது பெயர் இல்லை. இச்சூழலில் இந்நூல் சிறந்த ஆவணமாகவே கருதப்படும்.

News image
Updated On :18 மே 2026, 6:36 pm IST

கேளாத கதை (வ.உ.சி.யின் சிறை போராட்ட வரலாறு)-குருசாமி மயில்வாகனன்; பக்.1000, ரூ.1,500; நீந்தும் மீன்கள் வெளியீட்டகம்; தொண்டி-623 409; ✆ 80720 89186.

நூலாசிரியர் குருசாமி மயில்வாகனன் இதற்கு முன்பு வ.உ.சி. குறித்து எழுதிய கப்பலோட்டிய கதை (2021), தோழர் வ.உ.சி (2022), தற்போது கேளாத கதை என்ற பெயரில் வ.உ.சி. யின் சிறை வாழ்க்கை குறித்த ஆய்வுகள் மூலம் தனித்துவம் பெறுகிறது.

12.3.1908 -இல் கைது செய்யப்பட்டு 24.12. 1912 அன்று விடுதலை செய்யப்பட்ட காலம் வரை மொத்தம் 1,449 நாள்கள் வ.உ.சி. சிறையில் இருந்திருக்கிறார். பாளையங்கோட்டை, கோவை, கண்ணனூர் சிறைகளில் நான்கு ஆண்டுகள் கழித்திருக்கிறார். சிறையில் மற்றவர்களின் விடுதலைக்காக குரல் எழுப்புகிறார். அங்கு தனக்கான உரிமைகளுக்காக தினமும் மோதுகிறார். வெளியிலோ அவரது சுதேசி கப்பலை அரசு முடக்குகிறது. குடும்பமே வறுமையில் வாடுகிறது.

இந்நூல் அவரது சுயசரிதை, உளவு போலீஸ் குறிப்புகள், ஆஷ் கொலை வழக்கு அறிக்கை, பத்திரிகைக் குறிப்புகள், திருநெல்வேலி கழகம் ஆகியவை மூலம் தேதி வாரியாக திரட்டிய குறிப்புகளைக் கொண்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நூலின் தலைப்பு வ.உ.சி. குறித்து பாரதி எழுதிய கவிதையில் இருந்து எடுத்ததாகும். இரு பாகங்களாக வெளிவந்துள்ள முதல் பகுதி சிறை வாழ்க்கை (476 பக்கங்கள்); பகுதி 2 (520 பக்கங்கள்) முழுவதும் மேற்கோள்கள், சான்றுகள் என்று பிரிக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வமான காங்கிரஸ் சரித்திர நூலில் வ.உ.சி. குறித்து ஒரு வரி இல்லை. 50 ஆயிரம் பக்கங்கள் கொண்ட காந்திஜி தொகுப்பிலும் இவரது பெயர் இல்லை. இச்சூழலில் இந்நூல் சிறந்த ஆவணமாகவே கருதப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.