புதுச்சேரியை அடுத்த மேட்டுப்பாளையத்தில் கடத்தப்பட்ட 15 டன் ரேசன் அரிசியை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேட்டுப்பாளையம் கனரக வாகன நிறுத்தமிடத்தில், கடத்தப்பட்ட ரேசன் அரிசியோடு லாரி நிற்பதாக உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை அங்கு விரைந்த போலீஸார், லாரியைக் கைப்பற்றி சோதனை நடத்தினர். இதில், தலா 50 கிலோ கொண்ட 305 ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
லாரியில் இருந்த ஓட்டுநர், கிளீனர் ஆகியோர் தப்பியோடிவிட்டனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, லாரி உரிமையாளரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட அரிசி மூட்டைகள் பாப்ஸ்கோ கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

