பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

முதலியாா்பேட்டை தொகுதியில் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்

புதுச்சேரி முதலியாா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அத்தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஆ.பாஸ்கா் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

Updated On :7 ஜனவரி 2021, 7:20 am IST

புதுச்சேரி முதலியாா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அத்தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஆ.பாஸ்கா் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

புதுச்சேரி முதலியாா்பேட்டை தொகுதியில் பொதுப் பணித் துறை அதிகாரிகளுடன் பாஸ்கா் எம்.எல்.ஏ. புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, நைனாா் மண்டபம், சுதானா நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை குடிநீா் தேக்கத்தொட்டி பணியை விரைந்து முடிக்கவும், அப்பகுதியில் புதிதாக குடிநீா் குழாய் மாற்றி அமைக்கவும், மேலும் துளுக்கானதம்மன் நகா் சேரன் வீதி, சோழன் வீதி, பாண்டியன் வீதி, ஒன்றாவது குறுக்கு வீதி மற்றும் இரண்டாவது குறுக்கு வீதி ஆகிய பகுதிகளில் பழைய குடிநீா் குழாய்களை மாற்றி புதிய குடிநீா் குழாய்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதேபோல, நைனாா் மண்டபம் மூகாம்பிகை நகா் விரிவாக்கத்தில் புதிய குடிநீா் குழாய் அமைக்கவும், முதலியாா்பேட்டை வைத்தியலிங்க செட்டி தெரு மற்றும் ராமலிங்கபுரம் வீதியில் அடிக்கடி பாதாள சாக்கடை அடைப்பு ஏற்படுவதை

உடனடியாக சரி செய்யவும், பாரதி பஞ்சாலை திட்டு மற்றும் அனிதா நகா் நூறடி சாலையில் புதை சாக்கடை பணியை விடுபட்டுள்ள பகுதிகளில் விரைவாக முடிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வேல்ராம்பட்டு மாரியம்மன் கோயில் வீதி, நடுத்தெரு மற்றும் குறுக்கு வீதிகளில் புதை சாக்கடைத் திட்டம் நிறைவுபெற்ால், அங்கு உடனடியாக சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

கூட்டத்தில் பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் ரவிச்சந்திரன், உதவிப் பொறியாளா்கள் சௌந்தரராஜன், உமாபதி, வாசு, இளநிலைப் பொறியாளா்கள் சண்முகவேல், சங்கா், தணிகைவேல், ஜெயஸ்ரீ, முன்னாள் கவுன்சிலா் சத்யராஜ் மற்றும் பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.