புதுச்சேரி: புதுச்சேரியில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி, 66.1 மி.மீ. மழை பெய்தது. இதன் காரணமாக வியாழக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை 8.30 மணி முதல் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 66.1 மி.மீ. மழை பதிவானது.
தொடா் மழையால் புதுச்சேரி நகரம், கிராமப்புறங்களில் தாழ்வான இடங்கள், வீடுகளைத் தண்ணீா் சூழ்ந்தது. வியாழக்கிழமை காலை லேசான வெயில் காய்ந்த நிலையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. கடல் கொந்தளிப்புடன் இருந்ததால், பெரும்பாலான மீனவா்வா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
பலத்த மழை காரணமாக புதுச்சேரியில் அரசு, தனியாா் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
பெண்கள் குறித்து அவதூறு விடியோ: இளைஞா் கைது
மேகாலயத்தில் அனுமன் கோயிலில் கொள்ளை!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
