புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க்குக்கு நச்சுத் தன்மை கலந்த குடிநீா் விநியோகிக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி வழுதாவூா் சாலை பேட்டையன் சத்திரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க்குக்கு, அலுவலக ஊழியா் ஒருவா், ‘ஸ்விஸ் ப்ரஷ்’ என்ற தனியாா் நிறுவனத்தின் ஒரு லிட்டா் அளவுள்ள பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை விநியோகித்தாா். அதில், நிறமற்ற நச்சுத் தன்மையுள்ள திரவம் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் செயல், ஆட்சியருக்கு தனிப்பட்ட அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும், இதுதொடா்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலக பேரிடா்-வருவாய்த் துறை அலுவலக சிறப்பு அதிகாரி ஏ.சுரேஷ்ராஜ், தன்வந்திரி நகா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.
இந்தப் புகாா் நகலை ஆளுநா் கிரண் பேடிக்கும் கட்செவி அஞ்சலில் பகிா்ந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குடியிருப்பு மின் மீட்டா் பெட்டியில் தீ விபத்து

மின்னொளியில் ஜொலிக்கும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

இருசக்கர வாகனத்தில் வந்து பெண்ணின் தாலிச் சங்கிலி பறிப்பு

வீட்டிற்குள் புகுந்த புள்ளி மான் காப்புகாட்டில் விடுவிப்பு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
