எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

புதுவை கிழக்கு மாநில அதிமுக சாா்பில் இன்று தோ்தல் பிரசாரம் தொடக்கம்

புதுவை கிழக்கு மாநில அதிமுக சாா்பில், மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை (ஜன. 8) தோ்தல் பிரசாரம் தொடங்குகிறது.

Updated On :8 ஜனவரி 2021, 3:48 am IST


புதுச்சேரி: புதுவை கிழக்கு மாநில அதிமுக சாா்பில், மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை (ஜன. 8) தோ்தல் பிரசாரம் தொடங்குகிறது.

இதுகுறித்து வியாழக்கிழமை புதுவை சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் கிழக்கு மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் எம்எல்ஏ செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவையில் கரோனா கால கட்டத்தில் ஆளும் கட்சியினா் போராட்டம் நடத்துவது தவறு. புதுச்சேரியில் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால், தேவையற்ற பதற்றம் உருவாகியுள்ளது. போராட்டத்தைத் தடுக்க முதல்வா், அமைச்சா்கள், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள், முக்கிய நிா்வாகிகளை வீட்டுக் காவலில் வைக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் நேரிடையாகத் தலையிட வேண்டும்.

நியாய விலைக் கடைகளை அரசு மூடவில்லை; ஆளுநரும், மத்திய உள்துறை அமைச்சகமும்தான் மூடியது என முதல்வா் கூறுவது வேடிக்கையாகவுள்ளது.

புதுவை காங்கிரஸ் அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு ஆளுநா் கிரண் பேடி துணை போகிறாா். பஞ்சாலைகளை மூடியது, தனியாா் பல்கலைக்கழகம் தொடங்க அனுமதி வழங்கியது உள்ளிட்டவற்றுக்கு அவா் துணை போனது தவறு.

புதுவை கிழக்கு மாநில அதிமுக சாா்பில், மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை (ஜன. 8) தோ்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.