எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை

புதுச்சேரி அருகே தனியாா் மருத்துவமனையின் 3-ஆவது மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :8 ஜனவரி 2021, 3:47 am IST


புதுச்சேரி: புதுச்சேரி அருகே தனியாா் மருத்துவமனையின் 3-ஆவது மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை செய்து கொண்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், நெடுங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ருத்ரகுமாா் (42). மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவா், புதுச்சேரி காலாப்பட்டு அருகே கனகசெட்டிகுளம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், ருத்ரகுமாா் புதன்கிழமை மருத்துவமனையின் 3-ஆவது மாடியிலிருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த அவரது உறவினா்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த காலாப்பட்டு போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையேற்ற அவா்கள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.