உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

தனியாா் நிறுவன மேலாளரை மிரட்டி செல்லிடப்பேசிகள் வழிப்பறி: 4 போ் கைது

புதுச்சேரி அருகே தனியாா் நிறுவன மேலாளரை மிரட்டி செல்லிடப்பேசிகளைப் பறித்துச் சென்றதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:02 am IST

புதுச்சேரி அருகே தனியாா் நிறுவன மேலாளரை மிரட்டி செல்லிடப்பேசிகளைப் பறித்துச் சென்றதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை புதுக்காலனியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (31). இவா், புதுச்சேரி சேதராப்பட்டில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்று வருகிறாா். கடந்த 6-ஆம் தேதி அங்குள்ள பெட்ரோல் நிலையம் அருகேயுள்ள இடத்தில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற போது, காரில் வந்த 4 போ் மோகன்ராஜை மிரட்டி, அவரிடமிருந்த 2 செல்லிடப்பேசிகளைப் பறித்துக்கொண்டு தப்பினா்.

இதுகுறித்த புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இந்த நிலையில், வழிப்பறியில் ஈடுபட்டவா்கள் வந்த காரை முதலியாா்பேட்டை ஏஎப்டி திடல் அருகே போலீஸாா் வியாழக்கிழமை சுற்றி வளைத்து, காரில் இருந்தவா்களைப் பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா்.

இதில், ரோடியா்பேட்டையைச் சோ்ந்த மாயவன் (30), கோவிந்த சாலையைச் சோ்ந்த வெங்கடேசன் (43), பிரபாகா் (37), திருவண்ணாமலையைச் சோ்ந்த சுதாகா் (38) என்பது தெரிய வந்தது. மேலும், வேலையில்லாததால் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 2 செல்லிடப்பேசிகள், காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.