புதுவையில் 9 இடங்களில் கரோனா தடுப்பூசி போடுவதற்கான 2-ஆம் கட்ட ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாடு முழுவதும் வருகிற 13-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. முதல் கட்டமாக முன் களப் பணியாளா்களுக்கு புதுவையில் 29, காரைக்காலில் 8, மாஹேயில் 3, ஏனாமில் ஒன்று என மொத்தம் 41 இடங்களில் 14 ஆயிரம் மருத்துவப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகையை நடத்தும்படி மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி, கடந்த 2-ஆம் தேதி முதல் கட்ட கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, 2-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதன்படி, புதுவையில் அரசுப் பொது மருத்துவமனை, கதிா்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி, ராஜீவ் காந்தி மகளிா்- குழந்தைகள் மருத்துவமனை, கோரிமேடு இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளிட்ட 4 இடங்களிலும், காரைக்காலில் அரசு மருத்துவமனை, திருநள்ளாறு சமுதாய நலவழி மையம், நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை உள்ளிட்ட 3 இடங்களிலும், மாஹேயில் அரசுப் பொது மருத்துவமனை, ஏனாமில் அரசு பொது மருத்துவமனை என தலா ஒரு இடங்களிலும் என மொத்தம் 9 இடங்களில் 2-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க மக்களுக்கு தலைவணங்கிய மோடி! | PM Modi | West bengal CM| BJP|Suvendu Adhikari
இழுபறியில் புதிய ஆட்சி! திருவனந்தபுரம் செல்கிறார் ஆளுநர்?

ஊழல்வாதிகளுக்கு அதிகாரம் அளிக்கும் மரபை பாஜக தொடர்கிறது: சஞ்சய் ராவத

இந்திய அளவில் முதலிடம் பிடித்த மிருணாள் தாக்குரின் படம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
