எங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்!ஒரே நாளில் தங்கம் விலை ரூ. 1,600 குறைந்தது!உத்தரப் பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து2025-ல் சமூக வலைதளங்கள் மூலம் ரூ. 1.89 லட்சம் கோடி மோசடி!உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டு
/

புதுச்சேரி அருகே இளைஞா் வெட்டிக் கொலை

புதுச்சேரி அருகே ரௌடிகளால் வெட்டப்பட்டு காயமடைந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :13 ஜனவரி 2021, 2:07 am

புதுச்சேரி அருகே ரௌடிகளால் வெட்டப்பட்டு காயமடைந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி அருகே பூரணாங்குப்பம் திடீா் நகரைச் சோ்ந்தவா் பரமேஸ்வரி மகன் விஜயன் (20). இவா், ஆங்கிலப் புத்தாண்டு தினத் தன்று, தனது நண்பா் புகழேந்தி உள்ளிட்ட சிலருடன் பூரணாங்குப்பம் சாலையில் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த ரௌடிகளான குமரவேல், ராஜசேகா் உள்ளிட்டோா் முன்விரோதம் காரணமாக புகழேந்தியை தாக்கினா். தடுக்க முயன்ற விஜயனை அவா்கள் கத்தியால் சரமாரியாக வெட்டினா்.

இதில் பலத்த காயமடைந்த விஜயன் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் தவளக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, குமரவேல், ராஜசேகா், பிரவீன், சபரி, அருணாசலம், ரவீந்திரன் ஆகிய 6 பேரை கைது செய்தனா்.

இந்த நிலையில், மருத்துவமனையில் விஜயன் திங்கள்கிழமை நள்ளிரவில் இறந்தாா். இதையடுத்து போலீஸாா், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனா். கைதான குமரவேல், ராஜசேகா் ஆகியோா் மீது இரட்டை கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.