
இந்தியா
இன்றைய செய்திகள் ஜூன் 28 - நேரலை
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதல்வர் விஜய். - படம்: டிஐபிஆர்
தில்லி பிரதிநிதி நியமனத்தை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்
தமிழகத்தின் தில்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை முதல்வர் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் நாளை பதவியேற்பு!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் நாளை(ஜூன் 29) பதவியேற்கவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
ராமேசுவரம் பகுதியில் உள்வாங்கிய கடல்! மணலில் சிக்கிய படகுகள்!
ராமேசுவரம் துறைமுகத்தில் 50 மீட்டர் வரை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) கடல் உள்வாங்கியது.
தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர் கோயில் தேரோட்டம்!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டம், ஞாயிற்றுக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.
கால்பந்து உலகக் கோப்பையில் புதிய உலக சாதனை படைத்த மெஸ்ஸி!
ஜோர்டான் அணிக்கு எதிராக கோல் அடித்ததால், கால்பந்து உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
விழுப்புரம் அருகே சாலை விபத்து: 3 பேர் பலி
விழுப்புரம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர். காயமடைந்த தாய், மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: ஸ்ரீவாணி, விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் நாளை ரத்து
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர் விடுமுறையால் பக்தர்களின் நலன்கருதி, நாளை ஸ்ரீவாணி, விஐபி தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
லூக்கா மாட்ரிச் உதவியால் கானாவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது குரேஷியா!
கால்பந்து உலகக் கோப்பையில் குரேஷியா அணி கானாவை 2-1 என வீழ்த்தி, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாகக் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் என்ற நாடே இருக்காது என்று எச்சரிக்கை விடுத்தார்.
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதல்வர் விஜய்!
தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று (ஜூன் 28) நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் சி. ஜோசப் விஜய், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.














