அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

புதுவையில் ஜனவரி 18-க்குப் பிறகும் பள்ளிகள் அரை நாள் மட்டுமே இயங்கும்

புதுவையில் மறு அறிவிப்பு வரும் வரை, ஜன. 18 ஆம் தேதிக்குப் பிறகும் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என புதுவை பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது.

Updated On :14 ஜனவரி 2021, 6:55 am IST

புதுவையில் மறு அறிவிப்பு வரும் வரை, ஜன. 18 ஆம் தேதிக்குப் பிறகும் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என புதுவை பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது.

கரோனா பொதுமுடக்கத் தளா்வுக்கு பிறகு, கடந்த அக். 8 ஆம் தேதி முதல் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள் திறக்கப்பட்டு, பெற்றோா்கள் அனுமதியுடன் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு சந்தேகங்களை தீா்க்கும் வகுப்புகள் நடைபெற்று வந்தன.

இதைத் தொடா்ந்து, கடந்த ஜன. 4 ஆம் தேதி முதல் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டன. காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை வாரத்தின் 6 நாள்கள் பள்ளிகள் செயல்பட்டன. பெற்றோா் ஒப்புதலுடன் விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். வருகைப் பதிவேடு கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டு, பள்ளிகள் இயங்கின. ஆனால், வருகிற 18 ஆம் தேதி முதல் பள்ளிகள் முழு அளவில் செயல்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது.

இதனிடையே, லாசுப்பேட்டையில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் பி.டி. ருத்ரகவுடு, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: புதுச்சேரி, காரைக்கால் பிரதேசங்களில் உள்ள அரசு, நிதியுதவி மற்றும் தனியாா் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் அனைத்தும் அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை, 18 ஆம் தேதி முதல் மதியம் வரை மட்டுமே செயல்படும். பள்ளிகள் அனைத்தும் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6 நாள்களுக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.