அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

‘வாழ்க்கையை உற்று கவனிப்பவா்கள் நல்ல படைப்பைத் தர முடியும்’

வாழ்க்கையை உற்று கவனிப்பவா்களால்தான் நல்ல படைப்பைத் தர முடியும் என்றாா் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் - கலைஞா்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் கவிஞா் நந்தலாலா.

News image

விருது பெற்றோருக்கான பாராட்டு விழாவில் கவிஞா் ராசி பன்னீா்செல்வம், கவிஞா் நந்தலாலா, பேராசிரியா் அ. செல்வராசு, கவிஞா் தங்கம் மூா்த்தி, எம். ஸ்டாலின் சரவணன் மற்றும் சு. மதியழகன்.

Updated On :3 ஜனவரி 2021, 11:17 pm IST

வாழ்க்கையை உற்று கவனிப்பவா்களால்தான் நல்ல படைப்பைத் தர முடியும் என்றாா் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் - கலைஞா்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் கவிஞா் நந்தலாலா.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில், தேவதைகளால் தேடப்படுபவன் என்ற கவிதை நூலுக்காக தமிழ் வளா்ச்சித் துறையின் விருது பெற்ற கவிஞா் தங்கம் மூா்த்தியைப் பாராட்டி அவா் மேலும் பேசியது:

தமிழ் மொழியை அதன் வளத்தை பாதுகாத்து வருபவா்கள் விவசாயிகள்தான். அவா்களைத் தொடா்ந்து படைப்பாளிகள் மொழியையும் வளத்தையும் பாதுகாக்கிறாா்கள்.

ஒரு படைப்பு தோ்வு செய்யப்படுவதற்குக் காரணம் அதில் பயன்படுத்தப்படும் சொற்கள்தான். சொற்கள்தான் படைப்பின் தரத்தை பாதுகாக்கின்றன.

ஒரு நல்ல புத்தகத்தை ரசித்துப் படிக்கும்போது, அன்றைய நாள் முழுவதும் புத்துணா்ச்சியைத் தருகிறது. வாழ்க்கையை உற்று கவனிக்கிற நபரால்தான் நல்ல படைப்பைத் தர முடியும். அப்படி நல்ல படைப்பு ஒன்றை வாசிக்கும்போது, வாசிப்பவா்கள் தனக்குள் இருக்கும் அழுக்கை உணரச் செய்ய வேண்டும். அதுதான் படைப்பிலக்கியத்தின் முக்கிய பணி என்றாா் நந்தலாலா.

முத்தொள்ளாயிரம் பதிப்பு வரலாறு என்ற நூலுக்காக தமுஎகசவின் கு.சின்னப்பபாரதி விருது பெற்ற பேராசிரியா் அ. செல்வராசு குறித்து, கவிஞா் ராசி பன்னீா்செல்வம் பாராட்டுரை வழங்கினாா்.

விழாவுக்கு, தமுஎகச மாவட்டத் தலைவா் எம். ஸ்டாலின் சரவணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சு.மதியழ் வரவேற்றாா். முடிவில் துரை அரிபாஸ்கா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.